கொழும்பில் இரத்தினக்கல் விற்பனை பாரிய மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் சுமார் ஒன்பது கோடி ரூபா மதிப்புள்ள 09 இரத்தினக்கற்களை பெற்று, அதன் மதிப்புக்கு சுமார் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை வழங்கி பணத்தை மோசடி செய்துள்ளார்.
மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.