பலத்த எதிர்பார்ப்புகளோடு இந்தியா – பாகிஸ்தான் போட்டி!

ந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை பார்வையிட செல்லும் ரசிகர்கள் சில பொருட்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், போட்டி இடம்பெறும் போது பாதுகாப்பு கடமைகளுக்காக 2,000 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், 600 போக்குவரத்து பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுவதுடன், உடல் மற்றும் வாகனப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க மைதானத்தின் அனைத்து வாயில்களும் போட்டி ஆரம்பமாவதற்கு 5 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே பிற்பகல் 2 மணிக்கு திறக்கப்படும்.

பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் போத்தல்கள், பெரிய பயணப் பைகள், தலைக்கவசங்கள், ஜாக்கெட்டுகள், மதுபானம், இசைக்கருவிகள் மற்றும் ட்ரோன் கருவிகள் ஆகியவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதால், நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் மைதானத்தைச் சுற்றிக் கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் சபையின் விசேட அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்கள் கெத்தாராம வீதிச் சந்தி மற்றும் வில்சன் பெரேரா வீதி ஊடாக நுழைய அனுமதி இல்லை.

மைதான வளாகம், சதொச வாகனத் தரிப்பிடம், செபஸ்தியன் கால்வாய் வீதி (1 ஆவது மற்றும் 2 ஆவது பாலங்களுக்கு இடையில்), கோவில் வீதி மற்றும் அப்பிள்வத்தை தரிப்பிடங்கள், 100 அடி வீதியின் இருபுறமும் வாகனங்களை தரித்து நிறுத்த முடியும்.

வின்சென்ட் பெரேரா மாவத்தை, கிராண்ட்பாஸ் வீதி, பாபா புள்ளே பாலம் பகுதி, மல்வத்தை பாலம் மற்றும் மாளிகாவத்தை ஒழுங்கை உள்ளிட்ட மைதானத்திற்கு அருகாமையிலுள்ள பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் அல்லது தடைசெய்யப்படும். அனைத்து ரசிகர்களும் மிகவும் பொறுமையுடனும், ஒருவருக்கொருவர் மதிப்பளித்தும் இந்தப் போட்டியைக் கண்டு களிக்க வேண்டும்.

அநாகரிகமாகவோ அல்லது மதுபோதையில் கலகம் விளைவிப்போர் மீதோ கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்புத் தரப்பு எச்சரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு

mahm

அஹ்மதிநிஜாத் படுகொலை; இலங்கையின் உற்ற நண்பரை இழந்து விட்டோம் – நாமல் ராஜபக்ச இரங்கல்

March 3, 2026

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது ஆழ்ந்த இரங்கலைத்

thul

துலீப் மெண்டிஸ் பதவி விலகல்

March 3, 2026

கடந்த 14 ஆண்டுகளாக ஓமான் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றி, அந்த அணியை சர்வதேச மட்டத்தில்

n

சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு பிரதம நீதியரசர் விஜயம்

March 3, 2026

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டார். அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா,

pe

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நுவரெலியாவில் மூடல்?

March 3, 2026

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றுக் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு

inla

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

March 3, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.