பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு; கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவு

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு, அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து உண்மையான பாதுகாப்பை ஒருபோதும் உறுதிசெய்யமுடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலீடாக நீதியமைச்சினால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து நாம் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.

தேசிய பாதுகாப்பையும், பொது ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்கான கடப்பாடு அரசுக்கு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவானது பல தசாப்தகாலமாக இன மற்றும் மத சிறுபான்மையினருக்குத் தீங்கு ஏற்படுத்துவதற்கு வழிகோலிய மிகமோசமான சரத்துக்களில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கியிருக்கின்றது.

இந்நிலையில் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஒடுக்குமுறைச்சட்டங்களை மறுசீரமைத்தல், ஜனநாயக ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பல் ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இப்புதிய சட்ட வரைவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டமானது வலுகட்டாயக் கைது, வழக்குப் பதிவற்ற நீண்டகாலத் தடுத்துவைப்பு, வற்புறுத்தல் அடிப்படையிலான விசாரணைகள் மற்றும் கருத்துச்சுதந்திரம் ஒடுக்கப்படல் உள்ளிட்ட முறையற்ற பயன்பாடு தொடர்பான நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.

அச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தையும், நம்பிக்கையீனத்தையும், புறந்தள்ளப்படல் உணர்வையும் விதைக்கும் நோக்கில் அவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

அச்சட்டம் மறுசீரமைக்கப்படும் எனத் தொடர் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், அச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், பரந்துபட்ட விடயங்களை உள்ளடக்கியதும், தனிநபர் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படாதுமான பயங்கரவாதத்தடைச்சட்டங்கள் மீறல்களுக்கே வழிகோலும் என்பது நன்கு வெளிப்பட்டுள்ளது.

அதேவேளை இப்புதிய சட்ட வரைவில் பயங்கரவாதக்குற்றம் எனும் பதத்துக்கு சர்வதேச நியமங்களுக்கு உட்படாதவாறு, மிகப்பரந்துபட்ட வரைவிலக்கணம் அளிக்கப்பட்டிருப்பது குறித்து நாம் மிகுந்த கரிசனையடைகின்றோம். அவ்வாறான சரத்துக்களால் குறிப்பாக சிறுபான்மையின சமூகங்களால் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் முன்னெடுக்கப்படக்கூடிய மத ரீதியான, சிவில் சமூக மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான அச்சுறுத்தல் தோற்றுவிக்கப்படும்.

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து உண்மையான பாதுகாப்பை ஒருபோதும் உறுதிசெய்யமுடியாது. அரசைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்படும் சட்டங்கள், எவ்வித ஒடுக்குமுறைகளுமின்றி பொதுமக்களையும் பாதுகாக்கக்கூடியவகையில் அமையவேண்டும். அதுமாத்திரமன்றி அவை நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு உட்பட்டவையாகவும் இருக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய