பணிப்புறக்கணிப்பை ஒத்திவைத்தது கதிரியக்க சங்கம்

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தினால் நாளை (28) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பிக்கப்படவிருந்த இந்தத் தொடர் பணிப்புறக்கணிப்பை 48 மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்ததாக அந்தச் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார பிரதி அமைச்சருக்கும் இடையில், பணிப்புறக்கணிப்பிற்கான காரணங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமையவே இந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கடமைகளை மேற்கொள்ளும் வைத்தியர் ஒருவர் தொடர்பில் எழுந்த பிரச்சினையை முன்னிறுத்தியே சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், வைத்தியசாலையின் குறித்த பிரதிப் பணிப்பாளர் தொடர்பில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்படும் தீர்மானத்தை அறிவிப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சுகாதார பிரதி அமைச்சர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதி அமைச்சர், அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சுகாதாரத் துறையில் தற்போது முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளால் நோயாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 8 மணி வரை இந்தப் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தமது சங்கம் தீர்மானித்ததாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம மேலும் தெரிவித்தார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.