சந்தேக நபர்கள் மற்றும் அது தொடர்பான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கூட்டாளிகளிடமிருந்து கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும் நோக்கில் இந்த புகைப்படங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட நபர்கள்:
-
பிரப்ஜோத் சிங் (20): மிரட்டிப் பணம் பறித்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் கனடா எல்லைச் சேவைகள் முகமையால் (CBSA) கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு வெளிநாட்டுப் பிரஜை.
-
லவ்பீர் சிங் (22): பணம் பறிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டு, குடிவரவு விசாரணையைத் தொடர்ந்து கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
-
ஹர்ஜோத் சிங் (21): பொது இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
தரன்வீர் சிங் (19): பொது இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
தயஜீத் சிங் பில்லிங் (21): பொது இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
ஹர்ஷ்தீப் சிங் (20): ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியமை மற்றும் துப்பாக்கி இருப்பதை அறிந்திருந்தும் வாகனத்தில் பயணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
-
ஹன்ஸ்பிரீத் சிங் (21): துப்பாக்கி இருப்பதை அறிந்திருந்தும் வாகனத்தில் பயணித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரகசியத் தகவல்களை மிகவும் பாதுகாப்பான முறையில் கையாள்வதற்குப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெகுமதித் திட்டம்: சர்ரே மாநகர சபை $250,000 பெறுமதியான ‘சர்ரே பணம் பறிப்பு வெகுமதி நிதியத்தை’ (Surrey Extortion Reward Fund) உருவாக்கியுள்ளது. இதன் மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் வகையிலான தகவல்களை வழங்குவோருக்கு $100,000 வரை வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் சர்ரே பணம் பறிப்புத் தகவல் மையத்தை (Surrey Extortion Tip Line) 236-485-5149 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.