நோர்வே பாராளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்க முன்னேற்றம் குறித்து ஆராய்வு

இலங்கையில் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று ஒரு வருடகாலம் பூர்த்தியடைந்திருக்கும் பின்னணியில், இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பான சிறப்பு இடையீட்டு விவாதமொன்று நாளை வியாழக்கிழமை (26) நோர்வே பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட நோர்வே பாராளுமன்ற தொழிற்கட்சி உறுப்பினரான கம்ஸி குணரத்னத்தினால் இச்சிறப்பு இடையீட்டு விவாதத்துக்கான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதுடன், இவ்விவாதத்தில் நோர்வே வெளிவிவகார அமைச்சரும் உரையாற்றவுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, அவற்றின் ஊடாகப் புதிய அரசாங்கம் தெரிவாகி ஒரு வருடம் கடந்திருப்பதுடன் இக்காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச தரப்புக்களால் பல்வேறு எதிர்பார்ப்புக்கள் வெளியிடப்பட்ட பின்னணியில், இலங்கையின் தற்போதைய அரசியல் நகர்வு குறித்து இவ்விவாதத்தின்போது கேள்விகள் எழுப்பப்படவுள்ளன.

அதேபோன்று இவ்விவாதத்தில் குறிப்பாக ஆட்சியியல் நிர்வாகம், ஜனநாயக மறுசீரமைப்புக்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகிய விடயங்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம், சமகால மனித உரிமைகள் நிலைவரம், இன மற்றும் மத சிறுபான்மையினரைப் பாதிக்கும் விவகாரங்கள், இராணுவமயமாக்கல், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன தொடர்பில் நிலவும் கரிசனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் கம்ஸி குணரத்னம், ‘அண்மையகாலங்களில் இலங்கை பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கிறது. அதன்படி ஜனநாயகக்கோட்பாடுகள், மனித உரிமைகள் மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இதுபற்றிய சர்வதேச கலந்துரையாடல் ஒன்றை உருவாக்குவதே இச்சிறப்பு இடையீட்டு விவாதத்தின் நோக்கமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய

de

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

March 3, 2026

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால்

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –