நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விசேட ஒன்றுகூடல் ஹட்டன் ஹில் விவ் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை ( 31) அன்று இடம்பெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் தியாகு தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் நடப்பு வருடத்திற்கான ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன் போது நூல் வெளியிடல்,சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டியை நடத்துதல் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் திட்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒன்றியத்தின் தலைவரினால் உதவிகரம் நீட்டபட்டமையோடும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் புதுவருடத்தை முன்னிட்டு பரிசில்களும் வழங்கியமை விசேட அம்சமாகும்.
நிகழ்வில் செயலாளர் எம்.எஸ்.செல்ஹேவா,பொருளாளர் எம். ராம், உப தலைவர் எ.வீரக்கொடி, தேசிய அமைப்பாளர் எஸ். சிவகுமாரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.