நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு நிலையங்களின் தரவுகளின்படி, எந்த நீர்த்தேக்கமும் வெள்ள மட்டத்தில் இல்லை என்று நீர்ப்பாசன பணிப்பாளர், நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் அதிகபட்சமாக 50-100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, களனி மற்றும் களு கங்கைப் பகுதிகளில் 50-100 மி.மீ மழையும், ஜின் கங்கை மற்றும் நில்வல கங்கைப் பகுதிகளில் 50 மி.மீ மழையும், அத்தனகலு ஓயாப் பகுதிகளில் 50 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.