நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாடுகளிலிருந்து வழங்கப்பட்ட உதவிகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஒருகொடவத்தையில் அமைந்துள்ள அனர்த்த நிவாரண சேவை களஞ்சிய வளாகத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான குழு உறுப்பினர்கள் நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளிலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஒருகொடவத்தையில் உள்ள அனர்த்த நிவாரண சேவை களஞ்சிய வளாகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக விநியோகிக்கும் பணிகள் இந்நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் நிவாரணப் பொருட்கள் முன்தினம்(11) நாட்டை வந்தடைந்திருந்தன.

‘திட்வா’ (Ditwa) புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்காக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் சிலர் தமது சொந்த நிதியிலிருந்து 3.6 மில்லியன் ரூபா பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

அதற்கான காசோலை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் அந்த அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்க பிரான்ஸ் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert) தெரிவித்தார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்தவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்காக பல துறைகளில் தமது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் 13 மெட்ரிக் தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுதி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

3000 கொசுவலைகள், 2000 காற்று மெத்தைகள், 1000 படுக்கை விரிப்புகள் மற்றும் மேலும் 100 மெத்தைகள் அந்த நிவாரணத் தொகுதியில் அடங்கியிருந்தன.

இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்றும், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் குழுவொன்றும் நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக வருகை தந்திருந்தனர்.

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர்

December 13, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சாரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம

மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை

December 13, 2025

நாட்டில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்குத் தேவையான

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

December 13, 2025

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில்

mansa

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி ?

December 13, 2025

‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

wat

36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு

December 13, 2025

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக

பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வு

December 13, 2025

பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

யாழ் சிறையின் நிவாரண உதவி

December 13, 2025

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள்

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

December 13, 2025

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு

2025 ஆம் ஆண்டின் அரச வரி வருமானம் 4000 பில்லியன்

December 13, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது

December 13, 2025

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்வில் பொலிஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் உட்பட

Parl

18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

December 13, 2025

18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன

Arrest_1

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது

December 13, 2025

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன்,