நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது சூடானில் ட்ரோன் தாக்குதல்

சூடானின் தென் கோர்டோப மாகாணத்தில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எஃப் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில், இந்நாட்டில் தொடரும் உள்நாட்டுப் போரின் கோர முகத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கடுகிலி மற்றும் தில்லிங் நகரங்களை நோக்கிச் சென்ற லொறிகள் மீது கர்டாலா (Kartala) பகுதியில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அப்பட்டமாக மீறி, வேண்டுமென்றே மனிதாபிமானப் பணியாளர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக சூடான் மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்குள் உதவிப் படைப் பிரிவினர் மீது நடத்தப்படும் இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். தென் மற்றும் வட கோர்டோபன் மாகாணங்களை இணைக்கும் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஃப் மற்றும் சூடான் இராணுவம் கடும் போரிட்டு வருகின்றன.

கடுகிலி நகரம் தற்போது ஆர்.எஸ்.எஃப் படையினரின் முற்றுகையில் உள்ளது. தில்லிங் நகரம் சமீபத்தில்தான் இராணுவத்தால் மீட்கப்பட்டாலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னமும் ஆபத்து நிலவுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், வட டார்பூர் மாகாணத்தின் எல்-பாஷர் நகரில் ஆர்.எஸ்.எஃப் படைகள் நடத்திய தாக்குதல்கள் ‘இனப்படுகொலையின் அறிகுறிகளை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்