நிவாரணங்கள் தொடர்பான மோசடிகளை தவிர்க்க விசேட திட்டம்!

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான அவசர கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது: பல தரப்பினரும் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர்.

இருப்பினும், அனைவரும் ஒரே வகையான உதவிகளை வழங்குவது மக்களின் முழுமையான தேவையைப் பூர்த்தி செய்யாது. மாவட்டச் செயலகங்கள் ஊடாகத் தேவைகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

சில இடைத்தரகர்கள் அல்லது குழுக்கள், உதவிகளை வழங்குவதாகக் கூறி வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்குப் பெயரளவில் மட்டும் சிறிய உதவிகளை வழங்கிவிட்டுப் ஒளிப்படங்களை அனுப்புவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான மோசடிகளைத் தடுக்க, நன்கொடையாளர்கள் மாவட்டச் செயலகத்தின் ‘தேவைப் பட்டியலை’ பெற்றுக்கொண்டு உதவிகளை வழங்குவதே சிறந்தது. அரசாங்கம் அத்தியாவசிய நிதியையும் நிவாரணங்களையும் வழங்கி வருகிறது.

எனவே, அரசால் வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால், மக்களுக்குத் தேவைப்படும் ஏனைய உதவிகளை அரச சார்பற்ற நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் வழங்குவது பொருத்தமாக இருக்கும். மக்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், அவர்களின் தேவைகள் மாறுபடும்.

வாழ்வாதார உதவிகள் மற்றும் மீள்குடியேற்றத் தேவைகளை அறிந்து உதவுவது அவசியம். அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண நிதியத்துக்கும் புலம்பெயர் உறவுகள் நம்பிக்கையுடன் நிதியுதவிகளை வழங்கி வருவதாக ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் ஐ.நா. முகவர் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், தமது நிவாரணப் பணிகளை மாவட்டச் செயலகங்களின் ஒருங்கிணைப்புடனேயே முன்னெடுப்பதாக உறுதியளித்தனர்.

அத்துடன் தொடர்புகளுக்கு – இடர் முகாமைத்துவக் குழுவின் மாவட்ட ரீதியான இணைப்பாளர்களான யாழ்ப்பாணம்:

சுரேந்திரநாதன் – 077 484 0199

கிளிநொச்சி: அஜித்தா – 077 565 0671

மன்னார்: பிரதீப் – 071 990 5324

வவுனியா: கமலதாசன் – 077 613 8369

முல்லைத்தீவு: ரஜினிகாந்த் – 077 370 7720 கோகுலராஜ் – 077 395 7886 ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆளுநர் அறிவித்துள்ளார்.

pul

ரொட்டவெவ – புளியங்குளம் வயல் காணிகளை மீட்டுத் தருமாறு விவசாயிகள் அவசர கோரிக்கை!

May 26, 2026

திருகோணமலை – மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணிகளை தமக்கு மீண்டும் மீட்டுத் தருமாறு அந்தப்

cyber crimi

2.5 மில்லியன் டொலர் சைபர் கொள்ளை: இலங்கை பொலிஸாருக்கு ஆஸ்திரேலிய மத்திய பொலிஸார் அவசர உதவி

May 26, 2026

இலங்கை நிதி அமைச்சின் (Finance Ministry) கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி, ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்புச்

sajith 2026

அரசாங்கம் போலி ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது; பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு இருப்புக்கள் எவ்வளவு? சஜித் பிரேமதாஸ கேள்வி!

May 26, 2026

இலங்கை தற்போது பாரிய பொருளாதார அபாயங்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், அரசாங்கம் நாட்டின் உண்மையான நிதி நிலைமையைப் பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படையாக

Cont

ஏற்றுமதி வருமானம் உயர்வு

May 26, 2026

2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கான மொத்த ஏற்றுமதி வருமானம் 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்,

706711311_122294320256194641_9183670887836492799_n

கனடாவில் தெற்காசிய வர்த்தகர்களை அச்சுறுத்திய ‘போர் பிரதர்ஸ்’ சர்வதேசக் கொள்ளைக் கும்பல் அம்பலம்; 17 பேர் அதிரடி கைது!

May 26, 2026

கனடாவின் பீல் பிராந்தியம் (Peel Region) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தெற்காசிய (South Asian) வர்த்தகர்களை ஆயுத

flood

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் 31,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

May 26, 2026

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக

Sameera

பலஸ்தீனர்கள் தினமும் மோசமான சித்திரவதைகளை எதிர்கொள்கிறார்கள் – சமீரா மெஹ்புப்தீன்

May 26, 2026

காஸா நோக்கிப் பயணமான ‘சுமுத் குளோபல் புளோட்டிலா’ (Global Sumud Flotilla) எனப்படும் சர்வதேச கப்பல் பேரணியில் பங்கேற்று, பின்னர்

fss

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் கிண்ணியாவில் கைது

May 26, 2026

ருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள், அவற்றின் சாரதிகள் மற்றும் அனுமதியின்றி

kajend

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரைக்கு சார்பாக பொலிஸார் சதி செய்கிறார்கள் – செல்வராஜா கஜேந்திரன்

May 26, 2026

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் குறித்து பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக

706318351_122294335838194641_3083246395089727652_n

ரொறன்ரோ அடுக்குமாடி குடியிருப்பில் நபர் மீது கொடூரத் தாக்குதல்; 33 வயதுடைய சந்தேகநபரைத் தீவிரமாகத் தேடும் பொலிஸார்!

May 26, 2026

கனடாவின் ரொறன்ரோவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பொது நடைபாதைக்குள் புகுந்து, முகம் தெரியாத நபர் ஒருவரைத் தாக்கிப் படுகாயப்படுத்திய மற்றும்

708193332_122294365010194641_4242269405742790970_n

கனடாவில் மசாஜ் கிளினிக்கில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; 55 வயதுடைய சிகிச்சை நிபுணர் கைது; மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம்!

May 26, 2026

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், வோன் (Vaughan) நகரிலுள்ள ஆரோக்கிய நல்வாழ்வு மருத்துவக் கிளினிக் (Wellness clinic) ஒன்றில், பெண் வாடிக்கையாளர்

CANADA BORDER IMM

மூக வலைத்தளம் ஊடாக 15 வயதுச் சிறுமிக்கு வலைவீசிய எட்மன்டன் நபர் கைது; நிபந்தனைப் பிணையில் விடுதலை!

May 26, 2026

கனடாவின் அல்பர்ட்டா மாகாணம், மொரின்வில் (Morinville) பகுதியில் ‘ஸ்னாப்சாட்’ (Snapchat) சமூக வலைத்தளம் ஊடாக 15 வயது மைனரை ஏமாற்றி,