நிர்வாக தாமதங்களால் 88 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்கவில்லை?

மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும், 100 நாள் வேலை திட்டத்தில், மாநில அளவில் ஏற்படும் நிர்வாக தாமதங்களால் தொழிலாளர்களுக்கு 1,340 கோடி ரூபாய் ஊதியம் நிலுவையில் உள்ளதாக மத்திய ஊரக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டும், 88.66 லட்சம் தொழிலாளர்களுக்கு, 220 கோடி ரூபாய் தராமல் பாக்கி வைத்துள்ளது மாநில அரசு.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராமப்புறங்களில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஒதுக்கீடு நடப்பு 2025 – -26 நிதியாண்டில் இத்திட்டத்துக்கு மத்திய அரசு 86,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதில் நவம்பர் இறுதி வரை 68,000 கோடி ரூபாய் அளவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பல்வேறு மாநிலங்கள் இதுவரை 1,340 கோடி ரூபாய் அளவுக்கு தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளன.

அதில், ஆந்திரா, கேரளா, தமிழகம், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் 1,095 கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளன.

இந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி, மஹாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாட்டில் மொத்தம் 27.64 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 12.16 கோடி பேர் வேலை பெறுகின்றனர்.

தாமதம் ஆந்திராவில் 90.54 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு சம்பள பாக்கி நாட்டிலேயே மிக அதிகமாக 402 கோடி ரூபாயாக உள்ளது. கேரளாவில் 22.63 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். சம்பள பாக்கி, 340 கோடி ரூபாய்.

தமிழகத்தில் 88.66 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு சம்பள பாக்கி 220 கோடி ரூபாயாக உள்ளது. மத்திய பிரதேசத்தில் 1 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். சம்பள பாக்கி 131 கோடி ரூபாயாக உள்ளது.

மத்திய அரசு உரிய நேரத்தில் நிதி ஒதுக்கினாலும், மாநிலங்கள் தொழிலாளர்களின் வருகை பதிவேட்டை தாமதமாக இணையதளத்தில் பதிவேற்றுவது, பிழைகள் போன்ற நிர்வாக தாமதங்களால் இந்த சம்பள பாக்கி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 1.18 கோடி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ராஜஸ்தானில் 1.16 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், இந்த மாநிலங்களில் சம்பள பாக்கி முறையே 33 கோடி ரூபாய் மற்றும் 5 கோடி ரூபாய் என குறைந்த அளவிலேயே உள்ளதை புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட் டுகின்றன.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்