நிர்வாக தாமதங்களால் 88 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்கவில்லை?

மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும், 100 நாள் வேலை திட்டத்தில், மாநில அளவில் ஏற்படும் நிர்வாக தாமதங்களால் தொழிலாளர்களுக்கு 1,340 கோடி ரூபாய் ஊதியம் நிலுவையில் உள்ளதாக மத்திய ஊரக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டும், 88.66 லட்சம் தொழிலாளர்களுக்கு, 220 கோடி ரூபாய் தராமல் பாக்கி வைத்துள்ளது மாநில அரசு.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராமப்புறங்களில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஒதுக்கீடு நடப்பு 2025 – -26 நிதியாண்டில் இத்திட்டத்துக்கு மத்திய அரசு 86,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதில் நவம்பர் இறுதி வரை 68,000 கோடி ரூபாய் அளவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பல்வேறு மாநிலங்கள் இதுவரை 1,340 கோடி ரூபாய் அளவுக்கு தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளன.

அதில், ஆந்திரா, கேரளா, தமிழகம், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் 1,095 கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளன.

இந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி, மஹாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாட்டில் மொத்தம் 27.64 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 12.16 கோடி பேர் வேலை பெறுகின்றனர்.

தாமதம் ஆந்திராவில் 90.54 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு சம்பள பாக்கி நாட்டிலேயே மிக அதிகமாக 402 கோடி ரூபாயாக உள்ளது. கேரளாவில் 22.63 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். சம்பள பாக்கி, 340 கோடி ரூபாய்.

தமிழகத்தில் 88.66 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு சம்பள பாக்கி 220 கோடி ரூபாயாக உள்ளது. மத்திய பிரதேசத்தில் 1 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். சம்பள பாக்கி 131 கோடி ரூபாயாக உள்ளது.

மத்திய அரசு உரிய நேரத்தில் நிதி ஒதுக்கினாலும், மாநிலங்கள் தொழிலாளர்களின் வருகை பதிவேட்டை தாமதமாக இணையதளத்தில் பதிவேற்றுவது, பிழைகள் போன்ற நிர்வாக தாமதங்களால் இந்த சம்பள பாக்கி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 1.18 கோடி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ராஜஸ்தானில் 1.16 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், இந்த மாநிலங்களில் சம்பள பாக்கி முறையே 33 கோடி ரூபாய் மற்றும் 5 கோடி ரூபாய் என குறைந்த அளவிலேயே உள்ளதை புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட் டுகின்றன.

1751730278-rice-hjg-L

அனர்த்தம் ஏற்பட்டிருந்தும் கூட எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாய அமைச்சர்

December 14, 2025

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில

arre

ஹேரோயினை கடத்த முற்பட்டவர் கைது

December 14, 2025

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக

3 dd

டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

December 14, 2025

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

gun

காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

December 14, 2025

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

HAri

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு!

December 14, 2025

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர்

Mujibar Rahuman

குழு ஒன்று முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

December 14, 2025

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்

ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!

December 14, 2025

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை

சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடைகின்றது?

December 14, 2025

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு,

ஹமாஸின் முக்கிய தளபதி படுகொலை

December 14, 2025

காசா நகரில் ஒரு கார் மீது நடத்திய தாக்குதலின் போது ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

December 14, 2025

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்