நிதிக் கணிப்பீட்டில் யாழ். மாவட்டத்தில் ஊழல் – உதய கம்மன்பில

 

‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெலஉறுமய கட்சியின் தலைமையகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நெடுந்தீவு பிதேசத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழறுபடி நடந்துள்ளது.

நெடுந்தீவு பிதேசத்தில் 1,216 வீடுகள் அழிந்துள்ளதாகவும் 304 இலட்சம் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கண்கெடுப்பின் பிரகாரம் 893 வீடுகளே காணப்படுகின்றன.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி 1,216 வீடுகள் அழிவடைந்துள்ளதாக குறிப்பிட முடியும்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 893 வீடுகளே இருந்துள்ளன. இது எப்படி டிசம்பர் மாதம் 1,216 ஆக அதிகரித்தது. நெடுந்தீவில் உள்ள மக்கள் தீவுகளை விட்டு நகரங்களுக்கு குடிபெயர்வது வழமையாகும்.

மேலும் அதை அண்டிய பிரதேசங்களான வேலணை பிதேசத்தில் 544 வீடுகளே அழிவடைந்துள்ளன. 2025 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கண்கெடுப்பின் பிரகாரம் 4,379 வீடுகள் உள்ளன. காரைநகரில் 2025 ஆம் ஆண்டு 3,527 இருந்த நிலையில் 668 வீடுகள் ‘டித்வா’ பேரிடரில் அழிந்துள்ளன.

அத்தோடு நல்லூரில் 791 வீடுகள் அழிந்துள்ளன. மொத்த வீடுகளின் எண்ணிக்கை 18,614 ஆகும்.

ஏனைய பிரதேசங்களின் நிலைமை இவ்வாறு இருக்கும் நிலையில் நெடுந்தீவு கணக்கெடுப்பில் இலக்கங்களில் குழறுபடி இருப்பதாலே எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

நெடுந்தீவில் அனைத்து வீடுகளும் அழிந்துள்ள நிலையில் இருந்ததை விட அதிகரித்தது எப்படி. இந்த ஊழலை அரசாங்கம் அறிந்து கொள்வதற்கு முன் நாம் கண்டுபிடித்துள்ளோம்.

இதை ஜனாதிபதியின் கவனத்திற்கும் தெரியபடுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

an

அமைதியான உலகிற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் – ஜனாதிபதி

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும்

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து