நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம் முழுவதும் உள்ள சகல புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் ஒற்றுமையுடன் இணைந்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளை பேரனர்த்த அழிவில் இருந்து மீளக்கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது.

‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு உலகநாடுகளைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒன்றிணையவேண்டும் என வலியுறுத்தி அனைத்துலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறுப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவதியடைந்து வருகின்றன. மக்களின் வீடுகள், அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் வாழ்வாதாரம் என அனைத்தும் சீர்குலைந்திருக்கும் நிலையில், உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இவ்வேளையில் இன்றியமையாதவையாகியுள்ளன.

எனவே உலகம் முழுவதும் உள்ள சகல புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் ஒற்றுமையுடன் இணைந்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளை பேரனர்த்த அழிவில் இருந்து மீளக்கட்டியெழுப்ப உதவுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

அதேவேளை இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உதவிகளை முறையாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கென 7 பேர் கொண்டு சிறப்புக்குழுவொன்றை நிறுவியுள்ளோம்.

களத்தில் உள்ள அவசர தேவைகளை மதிப்பாய்வு செய்தல், களத்தில் நம்பகமான கூட்டாளர்களுடன் இணைந்து செயற்படல், நிதி மற்றும் வளங்களை ஒருங்கிணைத்தல், உதவிப்பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதைக் கண்காணித்தல், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமகாலத் தகவல்களை வழங்கல் உள்ளிட்ட பணிகள் இக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்படும்.

இது சாதாரண உதவி கேட்கும் தருணம் அல்ல. மாறாக இது தமிழர்களின் ஒற்றுமை வெளிப்படவேண்டிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க தருணமாகும். நம் தாயகம் நம்மை நாடுகிறது. இவ்வேளையில் நாமனைவரும் ஒன்றிணைந்து உதவினால் மட்டுமே நாட்டின் மீட்சி துரிதமடையும். ஆகவே அனைவரும் இணைந்து கைகோர்த்து, இந்த மனிதாபிமான முயற்சியில் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்