நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமை பற்றிய கரிசனையில் ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்காது அரசாங்கம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பில் எழுந்த சர்ச்சையின் போது தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மூன்று நாட்களுக்கு உரையாற்றுவதற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் 5ஆம் திகதி வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியாது என்று அரசாங்கம் கூறியதால் கட்சித் தலைவர் என்ற ரீதியில் நானும் ஏனைய கட்சித்தலைவர்களும் 5ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படுமாக இருந்தால் விவாதம் இன்றி அதனை நடத்துவதற்கு இணங்கினோம்.

அதன்படி தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம். நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறான நிலைமையில் இன்றைய தினத்தில் நண்பகல் 12.30 மணி வரையில் பாராளுமன்றத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றிலும் தவறானது. சுனாமியின் பின்னர் நாங்கள் இங்கேயே அதுபற்றி கலந்துரையாடினோம். இது எங்களின் கடமைகளே. ஆனால் இங்கே இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாட முடியவில்லை என்றால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அல்லது குறைந்தபட்சம் இன்றாவது இது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த பாராளுமன்றத்தின் கடமைகளை ஆளும் தரப்பு மீறியுள்ளது. இதனால் நாங்களும் சபையில் இருந்து வெளியேறுகின்றோம் என்றார்.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான