நாட்டில் இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்தத் தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறை

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (15) மீண்டும் கூடியது.

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளைத் தொடர்ந்து, இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்துதல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகள் குறித்த அவசியமான முடிவுகளை எடுப்பதற்காக இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி கூடிய இந்த சபை, திடீர் அனர்த்த நிலைமையுடன் கடந்த நவம்பர் 27ஆம் திகதியும், தற்போது டித்வா புயலுக்கு பிறகும் மீண்டும் கூடியுள்ளது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான யோசனை இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது.

புயலின் தாக்கம் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட விளக்கினார்.

நாடு முழுவதும் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளளதுடன். 6,164 வீடுகள் முழுமையாகவும் 112,110 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் தொடர்பான ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதனிடையே, மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் அரசாங்கத்தின் திட்டத்தில், தாக்கம் ஏற்படக் கூடிய வலயங்களில் உள்ள 15,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த மக்களுக்காக 8,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்தரப்பு அணுகுமுறை மூலம் பெருந்தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்காக வடிகாலமைப்புப் பொறிமுறையை நிறுவுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்கான ஒரு பொறிமுறையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் உட்பட தொடர்புடைய தரப்பினர்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நிறுவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், தாக்கம் ஏற்படக் கூடிய மத்திய பிரதேசத்தை முகாமைத்துவம் செய்வதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவொன்றை நியமித்தல் மற்றும் அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தகவல்களை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் தளத்தைத் தயாரித்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அதேநேரம், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், கிடைத்துள்ள அனைத்து வெளிநாட்டு நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பதற்காக ஒரு குழுவொன்றை நிறுவி அதற்கு அதிகாரம் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, இந்த வாரத்திற்குள் நிதியை முழுமையாகச் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தரவுகளைச் சேகரித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், அதற்கான சட்ட கட்டமைப்பின் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே, 2016 ஆம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட காப்புறுதி முறைமையில், அரசாங்கத்திற்கு 5.79 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

இந்தநிலையில், இந்த காப்புறுதி முறைமையை மீண்டும் ஆரம்பிப்பதாயின், அது அரசாங்கத்திற்கு நன்மை பயக்கும் என்றும் பயனாளிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதை உறுதிசெய்ய, நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுத் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த கூட்டத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், ஆளுநர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புப் படைப் பிரதானிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

in

மற்றுமொரு இந்திய கப்பல் நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது

December 16, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண பொதிகளுடன் மற்றுமொரு இந்திய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தியாவால்

amb

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய தேரருக்கு பயணத்தடை

December 16, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து

mina

அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

December 16, 2025

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15)

Police logo

கொலை வழக்கு: சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்

December 16, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில்

government

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

December 16, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

December 16, 2025

பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் 5,000 ரூபாவிற்கான

photo-collage.png (18)

கம்போடியா-தாய்லாந்து யுத்தம் நிறுத்தக் கோரி களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகம்!

December 16, 2025

கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள்

v

தொல்பொருள் திணைக்கள பதாகை அகற்றல் வழக்கு ஒத்திவைப்பு

December 16, 2025

வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினரால் தொல்பொருள் திணைக்கள பதாதை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மாசி மாதம்

sil

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

December 16, 2025

1982ஆம் ஆண்டு நாட்டின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய இலங்கையின் முன்னாள் லெக்

wind

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சி…

December 16, 2025

இன்றிலிருந்து நாட்டில் மழை ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின்

ba

மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து; இருவர் காயம்

December 16, 2025

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா

ce

பதிவு சான்றிதழ்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

December 16, 2025

அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும்