நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை

திசைகாட்டி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை பக்கம் 72 இல் 20,000 பேரை ஆசிரியர் தொழிலுக்கு உள்ளீர்ப்போம் என்றும், 3,000 STEM பட்டதாரிகள் மற்றும் 9,000 STEM அல்லாத பட்டதாரிகள் தகவல் தொழிநுட்ப துறையிலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு, சுங்க திணைக்களத்திற்கு, வெளிநாட்டுச் சேவைக்கு, சுற்றுலா கைத்தொழிற்றுறைக்கு 3000 பேர் என்ற அடிப்படையில் தொழில்களைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், இவ்வாறு இவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ஒரு வருட பயிலுநர் பயிற்சிகளை வழங்கி, இடைப்பட்ட காலத்தில் இவர்களுக்கான ஒரு கொடுப்பனவைப் பெற்றுக் கொடுத்து, ஆட்சேர்ப்பு செய்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் தனது யோசனையை முன்வைத்து தெரிவித்தார்.

கொரிய வேலைவாய்ப்பு பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமரிடம் முன்வைத்தார்.

வேலையில்லாப் பிரச்சினைக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தீர்வுகளைத் தேட வேண்டும். 2004 ஆம் ஆண்டு கொரியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் மொழிப் பரீட்சை உட்பட அனைத்து தகுதிகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டன. சராசரியாக, ஒரு காலாண்டிற்கு சுமார் 1,500 முதல் 2,000 வேலை வாய்ப்புகள் இதன் மூலம் கிடைத்து வந்தன. 2023 முதல், ஒரு காலாண்டிற்கு கிடைத்து வந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை இன்று 200 க்கும் குறைவாகவே அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையால் சுமார் 5,000 பேர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த பரீட்சைத் தகுதிகள் 2 ஆண்டுகளுக்கு மாத்திரமே செல்லுபடியாகும், என்பதால், இக்காலப்பிரிவிற்குள் தகுதி பெற்றோரை கொரியாவிற்கு அனுப்பாவிட்டால், பெரும் தொகை பணத்தை கைவிடும் நிலை ஏற்படும். ஆகையால் இராஜதந்திர ரீதியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட 5,000 பேருக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்து, அவர்களுக்கு தொழில்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேட்டுக்கொண்டார்.

By C.G.Prashanthan

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்

Anusa

யாழ். இளைஞர் அனுசன் சர்வதேச ரீதியில் வெற்றியாளராக தெரிவு

December 6, 2025

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant

fa

அறவழியில் போராட்டம்; தையிட்டி விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை – அருட்தந்தை சத்திவேல்

December 6, 2025

தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை