நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்

நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பங்களிப்புடன் முறையான மின்சார முகாமைத்துவத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காகத் தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு, திங்கட்கிழமை (23) அன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் நாளாந்த மின்சார நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், மின்சாரத்தை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சவால்களை முறியடிக்க, நிறுவன ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது அனைவரதும் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய அலங்கார மின் கட்டமைப்புகளுக்கு அதிகளவிலான மின்சாரம் செலவிடப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் மின்சார நுகர்வில் குறிப்பிடத்தக்க அளவைச் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நடைமுறைச் சாத்தியமான நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், குறிப்பாக அரச சேவைக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டல்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன், உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் மின்சார நுகர்வைக் குறைப்பதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

நகர்ப்புறங்களில் அவசியமற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட வலுசக்தி சேமிப்பு யோசனைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

DRO

ஆட்கள் பதிவுத் துறை முக்கிய அறிவிப்பு

March 23, 2026

ஆட்கள் பதிவுத் துறையின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆட்கள் பதிவுத் துறையின் தலைமை அலுவலகம்

ddda

தனியார் நிலத்தில் காட்டுத் தீ

March 23, 2026

மலையகத்தில் தொடரும் வறட்சியான காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச் செயல் அதிகரித்துள்ளது. இதன்படி அட்டன் மண்டலக் கல்வி அலுவலகத்திற்குப்

sw

சுவிஸ் வாழ் 3 இலங்கையர்கள் இஸ்தான்புல் வீதி விபத்தில் பலி!

March 23, 2026

இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர்கள் என அடையாளம்

tru

பதற்ற நிலையில் திடீர்த் திருப்பம்: ஈரான் மீதான தாக்குதல் ஒத்திவைப்பு

March 23, 2026

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலைக்கு இடையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

shiyamali

இலங்கையில் போதுமான அளவு விவசாய உற்பத்திகள் கையிருப்பில் உள்ளன!

March 23, 2026

வரவிருக்கும் பருவத்திற்குத் தேவையான விதைகள் விவசாயத் திணைக்களத்தில் உள்ளன. அடுத்த போகத்திற்குத் தேவையான விதை , நெல் பசளை வகைகள்

n_1

இலங்கையின் தாதியர் சேவை முன்னேற்றம் குறித்து பிரதமர் விசேட கவனம்

March 23, 2026

இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட

Aalam

வாழ்வாதார நெருக்கடியில் வடமாகாணக் கடற்றொழிலாளர்கள்

March 23, 2026

மத்திய கிழக்கில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால் இலங்கையும் அந்த தாக்கத்தின் எதிரொலியாக எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. குறிப்பாக வடமாகாணத்தில்

kili

ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதற்கே உயிர் அச்சுறுத்தல் – கிளிநொச்சி ஊடக அமையம்

March 23, 2026

பொதுப்படையான விழிப்புணர்வை ஏற்படுத்திய கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் என்பது

tiket

எரிபொருள் விலையேற்றம்: அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணங்கள்!

March 23, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு

Vasantha samara

உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் வேண்டுகோள்

March 23, 2026

நாட்டில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க

ddd

இத்தாலி விபத்தில் இலங்கை இளைஞன் பலி

March 23, 2026

இத்தாலியின் மிலான் நகரில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கை சேர்ந்த இளைஞன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி

lab

பாடசாலையொன்றில் விஞ்ஞான பரிசோதனையின் போது சோதனை குழாய் வெடித்தது!

March 23, 2026

பண்டாரவளை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் விஞ்ஞான பரிசோதனையின் போது சோதனை குழாய் (Test Tube) ஒன்று வெடித்ததில் காயமடைந்த ஆசிரியை ஒருவரும்