இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பொடி கே ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். இப்படம் மதுரையைப் பின்னணியாக வைத்து உருவாகிறது. இதற்கான, முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அடுத்ததாக, நடிகர் விக்ரம் வித்தியாசமான கதைக்களங்களில் 4 திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகத் தெரிவித்ததுடன் கடந்த ஓராண்டாக நல்ல கதைகளைக் கேட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த 4 திரைப்படங்களில் ஒன்றை இருமுகன் திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.