த்ரில் முடிவுடன் மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி!

நவி மும்பையில் நேற்று (21) இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் இடையே நடைபெற்று முடிந்த 2025ஆம் ஆண்டின் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பங்களாதேஷ் மகளிரை 07 ஓட்டங்களால் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியுடன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள இலங்கை வீராங்கனைகள், உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பினையும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

முன்னதாக போட்டியினா நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணியினர் சாமரி அத்தபத்து மூவம் சிறந்த ஆரம்பம் பெற்ற போதிலும் பின்னர் மந்தகதியில் ஓட்டங்களை குவித்ததன் காரணமாக 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் ஹசினி பெரேரா 99 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 13 பெளண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் சமரி அத்தபத்து 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகளோடு 46 ஓட்டங்கள் குவித்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சு சார்பாக சொர்னா அக்தேர் 3 விக்கெட்டுக்களையும், ரெபியா கான் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 203 ஓட்டங்களை பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, போட்டியின் இறுதி ஓவர் வரை மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது.

போட்டியின் இறுதி ஓவரில் 6  பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டிருக்க, பங்களாதேஷ் அணியானது 194 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

எனினும் இறுதி ஓவரில் முதல் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்த பங்களாதேஷ் வீராங்கனைகள், ஒரு ஓட்டத்தினை மாத்திரமே பெற்றுக் கொள்ள போட்டியில் அவர்கள் 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களுடன் போட்டியில் படுதோல்வி அடைந்தது.

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் அதன் தலைவி நைகர் சுல்தானா 77 ஓட்டங்கள் பெற, ஷர்மின் அக்தார் 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்துக் கொண்டார்.

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் சாமரி அத்தபத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுக்களை சுருட்டினார். போட்டியின் ஆட்டநாயகியாக ஹசினி பெரேரா தெரிவானார்.

இப்போட்டியின் தோல்வியுடன் பங்களாதேஷ் இந்த மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை

an

அமைதியான உலகிற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் – ஜனாதிபதி

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும்

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த