த்ரில் முடிவுடன் மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி!

நவி மும்பையில் நேற்று (21) இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் இடையே நடைபெற்று முடிந்த 2025ஆம் ஆண்டின் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பங்களாதேஷ் மகளிரை 07 ஓட்டங்களால் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியுடன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள இலங்கை வீராங்கனைகள், உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பினையும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

முன்னதாக போட்டியினா நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணியினர் சாமரி அத்தபத்து மூவம் சிறந்த ஆரம்பம் பெற்ற போதிலும் பின்னர் மந்தகதியில் ஓட்டங்களை குவித்ததன் காரணமாக 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் ஹசினி பெரேரா 99 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 13 பெளண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் சமரி அத்தபத்து 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகளோடு 46 ஓட்டங்கள் குவித்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சு சார்பாக சொர்னா அக்தேர் 3 விக்கெட்டுக்களையும், ரெபியா கான் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 203 ஓட்டங்களை பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, போட்டியின் இறுதி ஓவர் வரை மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது.

போட்டியின் இறுதி ஓவரில் 6  பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டிருக்க, பங்களாதேஷ் அணியானது 194 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

எனினும் இறுதி ஓவரில் முதல் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்த பங்களாதேஷ் வீராங்கனைகள், ஒரு ஓட்டத்தினை மாத்திரமே பெற்றுக் கொள்ள போட்டியில் அவர்கள் 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களுடன் போட்டியில் படுதோல்வி அடைந்தது.

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் அதன் தலைவி நைகர் சுல்தானா 77 ஓட்டங்கள் பெற, ஷர்மின் அக்தார் 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்துக் கொண்டார்.

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் சாமரி அத்தபத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுக்களை சுருட்டினார். போட்டியின் ஆட்டநாயகியாக ஹசினி பெரேரா தெரிவானார்.

இப்போட்டியின் தோல்வியுடன் பங்களாதேஷ் இந்த மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்

nug

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு

November 17, 2025

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

uthaya

அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது – உதய கம்மன்பில

November 17, 2025

திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை