மதுரை
நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகத் தொடர வேண்டும் என முதலமைச்சர் ஏன் பேசவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு, தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் தெரிவித்த முக்கிய கருத்துகள்:
சட்டமன்றத் தீர்மானமும் எதிர்ப்பும்:
“மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றித் தொடர்ச்சியாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வந்துள்ளது. முதலமைச்சருக்குத் தெரியாமலா இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும்?”
திமுகவின் இரட்டை வேடம்:
“தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருகிறது. கடந்த காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை தொடர்பான ஆவணங்களைத் தாள்களைக் கிழித்துப் போட்டார்; ஆனால், இன்றோ படித்துப் பார்த்துச் சொல்ல வேண்டும் எனக் கூறி மழுப்புகிறார்.”
பாஜகவுடன் கள்ளக் கூட்டணி:
“திமுக தொடர்ச்சியாகவே பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்திருந்தது. தற்போது திமுகவின் உண்மையான நிலைப்பாடு மத்திய பாஜக அரசை நோக்கித்தான் செல்கிறது என்பது மக்கள் மத்தியில் மிக வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது,” என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
#Delimitation #TVKMLA #Musthafa #DMKvsTVK #MKStalin #ChiefMinisterVijay #TVKGovernment #MaduraiNews #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates