தொகுதி மறுவரையறைக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்! எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி முடிவு!

சென்னை
மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதாவால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், இதனை எதிர்த்துத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காங்கிரஸ் (19 எம்.பி.க்கள்), கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ – 2, சிபிஎம் – 2), விசிக (2), மதிமுக (1), மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) ஆகிய கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 37 எம்.பி.க்கள் இக்கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
கூட்டத்திற்குப் பின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:
பாஜகவின் ஆஃபர் சதி – மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்):
தொகுதிகளை 50 சதவீதம், 60 சதவீதம் கூட்டுவோம் என பாஜகவினர் கூறுவதெல்லாம் அப்பட்டமான ஏமாற்று வேலை. தமிழ்நாட்டின் அதிகாரத்தைப் பறிப்பதற்கான மிகப் பெரிய சதிதான் இந்தத் தொகுதி மறுவரையறை. ‘ஃபேர் டீலிமிட்டேஷன்’ (Fair Delimitation) என்று அவர்கள் கூறுவது தவறான புரிதல். தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளையும், தமிழ்நாட்டிற்கான 39 தொகுதிகளையும் எந்த மாற்றமுமின்றிப் பாதுகாப்பது மட்டுமே நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும்.
‘ஃபேர் டீலிமிட்டேஷன் அல்ல; நோ டீலிமிட்டேஷன்’ – சு.வெங்கடேசன் (சிபிஎம்):
மத்திய உள்துறை அமைச்சர் 50% வரை தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்பதை ஒரு சலுகையைப் போலக் காட்டுகிறார். ஆனால் அது ஒரு ஏமாற்று வேலை. உண்மையான ‘ஃபேர் டீலிமிட்டேஷன்’ என்பது எந்தவொரு மறுவரையறையும் செய்யாமல் இருப்பதே (No Delimitation) ஆகும். மாநிலங்களுக்குத் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
மக்களின் கோரிக்கையே இல்லை – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்:
தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என்று இதுவரை மக்களிடமிருந்தோ, எந்தத் தரப்பிலிருந்தோ எவ்விதக் கோரிக்கையும் எழவில்லை. அப்படியிருக்கையில் எதற்காக இந்த மறுவரையறை? மக்களின் நலனுக்காக அல்லாமல், தேர்தல் கணக்குகளுக்காகவும் பாஜகவின் அரசியல் தேவைக்காகவும் இது மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.
சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்:
இறுதியாக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திட, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு சார்பில் விரைவில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது!
#DelimitationBill #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #TNAssembly #TamilNaduRights #TNMPsMeeting #Chennai #TNPolitics #ManickamTagore #TamilNaduNews #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNNewsUpdates
778972206_1621427252686601_4469929818179508992_n

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்க இராணுவம் முயற்சி: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு..!

August 24, 2026

பலாலி பகுதியில், இராணுவம் தொடர்ந்து கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுற்றி நடைபெறும் போராட்டத்தில் இன்றைய தினம்

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்