தேர்தல் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்புகள்; மலையக அரசியல் அரங்கத்துடன் பவ்ரல் அமைப்பு கலந்துரையாடல்

தேர்தல் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்புகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் கட்சிகளுடன் பவ்ரல் அமைப்பு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்தாய்வு கூட்டங்களின் ஓர் அங்கமாக மலையக அரசியல் அரங்கத்துடனான கலந்துரையாடல் ஹட்டனில் நடைபெற்றது.

நீதியும் நியாமுமான தேர்தல்களைக் கண்காணிப்பதற்கான மக்கள் இயக்கமான பவ்ரல் நிறுவனப் பிரதிநிகளுக்கும் மலையக அரசியல் அரங்கத்தின் உயர் பீட உறுப்பினர்களுக்கும் இடையிலான மேற்படி கலந்துரையாடலில் வாக்காளர்களைப் பதிவு செய்தல், வாக்காளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல், முன்கூட்டிய வாக்களிப்பு முறையை அறிமுகம் செய்தல், தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்தல், அரச ஆதனங்களைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்தல், தேர்தல் கொள்கைப் பிரகடனங்கள், வேட்புமனு நிராகரிப்பைக் குறைத்தல், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் விஸ்தரிப்பு , தேர்தல் கால அட்டவணையை உறுதி செய்தல், தகைமை அடிப்படையில் தேசியப் பட்டியல் வேட்பாளர்களைத் தெரிவு செய்தல், வேட்பாளர் சுயவிபரக் கோவையைச் சமர்ப்பித்தல், கட்சி வாழுதல் குறித்த விதிமுறைகள் அமைத்தல், விசேட தேவையுடையோரின் வாக்குரிமையை உறுதி செய்தல், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல், தேர்தல் பிரசாரச் சட்டங்கள், பிரஜைகளை அரசியல் ரீதியாக வலுப்படுத்தல், தேர்தல்கள் நீதிமன்ற முறையை ஸ்தாபித்தல், தேர்தல் முறைமைகளும் ஆட்சி முறைமையும் ஆகிய 21 தலைப்புகளின் கீழ் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் மலையக மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான பல முன்மொழிவுகளை எடுத்துரைத்துள்ளதோடு அவற்றை எழுத்து மூலமாகவும் தேசிய மறுசீரமைப்பு மட்டத்துக்கு வழங்கவுள்ளதாகவும் மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,

“மலையக மக்களின் குடியுரிமைப் பறிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மூன்று தசாப்த காலமாக அரசியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே மலையக மக்கள் இந்த நாட்டில் வாழவைக்கப்பட்டனர்.

இதன் பின்னாளில் இலங்கைக் குடியுரிமை கிடைக்கப்பெற்ற போதும் கூட அவை அர்த்தமுள்ள குடியுரிமையாக அமையவில்லை.

இந்த மூன்று தசாப்த கால அரசியல் இடைவெளியைச் சரி செய்யும் வகையில் நாடாளுமன்றம், மாகாண சபை முறைமைகளில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்துக்கான தேர்தல் தொகுதி மற்றும் பிரதிநிதித்துவச் சிறப்பு ஏற்பாடு உருவாக்கப்பட வேண்டும்.

இத்தகைய கலந்துரையாடல்களை மலையக மாவட்டங்கள் தோறும் அரசியல் அரங்கம் முன்னெடுப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் தமது அடுத்த கலந்துரையாடலை பதுளை மாவட்டத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் மயில்வாகனம் திலகராஜா மேலும் கூறினார்.

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்

Anusa

யாழ். இளைஞர் அனுசன் சர்வதேச ரீதியில் வெற்றியாளராக தெரிவு

December 6, 2025

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant

fa

அறவழியில் போராட்டம்; தையிட்டி விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை – அருட்தந்தை சத்திவேல்

December 6, 2025

தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை

anu

அனர்த்த மரண எண்ணிக்கை தொடர்பாகப் பொய்த் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு

December 6, 2025

நாடாளுமன்றத்தை தவிர்த்து வெளியில் போலியான பிரசாரம் முன்வைக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று ஜனாதிபதி அநுர