தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மீது ஒப்பந்த மோசடிக் குற்றச்சாட்டு!

கம்பஹா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள், அரசாங்க ஒப்பந்தங்களைத் தமது பெயரில் செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அப்பிரதேச சபையின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நேற்று (07) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, உள்ளூராட்சி சபைகள் கட்டளைச் சட்டத்தின் படி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஒப்பந்தங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனத் தொடர்புடைய உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர்.

அத்துடன் அவ்வாறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு பணம் பெற்றுக்கொள்வது அவர்களது உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுவதற்கு ஏதுவான ஒரு காரணியாகும் எனவும் சுட்டிக்காட்டிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இச்செயற்பாடு தொடர்பில் மேல் மாகாண ஆளுநரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த உறுப்பினர்கள் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த டிசம்பர் மாத சபை அறிக்கையில் அசோக குமார என்ற உறுப்பினரும், தர்மவன்ச என்ற உறுப்பினரும் பெற்றுக்கொண்ட பணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி சஹன் பிரசாத் என்ற உறுப்பினர் பணம் பெற்றுக்கொண்ட விதமும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தின் படி நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது. இந்த நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டால் உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும். அடுத்த சபை அமர்வு 10 ஆம் திகதி உள்ளது. வாசிக்கும் திறன் கொண்டவர்கள் தானே இருக்கிறார்கள். வெட்கம் இருந்தால் சட்டத்தை வாசித்துப் பார்த்துவிட்டு சபைக்கு வரவேண்டாம்.” என்று கூறினர்.

இதற்கிடையில் கம்பஹா பிரதேச சபையின் தவிசாளரும் மாதாந்தம் 500 லீற்றர் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு பணத்தை வீண்விரயம் செய்வதாகவும் அந்த உறுப்பினர்கள் குழு குற்றம் சுமத்தியது.

தவிசாளர் இரண்டரை இலட்சம் ரூபா மாதாந்த வாடகை அடிப்படையில் மோட்டார் வாகனம் ஒன்றையும் பெற்றுக்கொண்டு சபையின் பணத்தை வீண்விரயம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

“இவர்கள் சபையின் பணத்தைச் சேமிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து பெருமளவான மக்களின் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால் இன்று பிரதேச சபையின் தவிசாளர் மாதத்திற்கு 5 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளார். அவர் பயன்படுத்தும் வாகனம் வாடகை அடிப்படையில் மாதாந்தம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாவுக்குப் பெறப்பட்டுள்ளது. அவர் 500 லீற்றர் டீசலைச் சபையின் நிதியிலிருந்து பெற்றுள்ளார்.

பிரதேச சபையின் தவிசாளர் இவ்வாறு எடுத்துக்கொள்ள அவர் என்ன இலங்கையின் ஜனாதிபதியா? இவர்கள் மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி விசேட வரப்பிரசாதங்களைப் பெறுகின்றனர். இவர்கள் களைகளைப் பிடுங்கிவிட்டு மலர்ச்செடிகளை நடுவதாகக் கூறித்தான் சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்போது அந்த மலர்ச்செடிகள் சும்மாவே களைகளாக மாறிவிட்டன.” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.