தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முன்னெச்சரிக்கைகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்படும் மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்காகக் காணப்படும் அறிவியல் ரீதியிலான முறைமைகளில் மட்டுப்பாடுகள் காணப்படும் நிலையில், இவ்வனர்த்தமானது அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ளதால், நிலைமையைப் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக்கொள்ளாமல் இத்தருணத்தில் செயற்படுமாறும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற (மண்சரிவு போன்ற) இயற்கை நிகழ்வுகளை முகாமைத்துவம் செய்வதற்குள்ள அறிவியல் முறைமைகளில் மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த அனர்த்தம் நம் அனைவருக்கும் ஒரு சவாலான நிலைமை என்பதால், நாம் அனைவரும் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தாமல், இந்தச் சந்தர்ப்பத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமானது, வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்கள் மற்றும் எமது நிறுவனத்தினால் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள தன்னியக்க மழைமானிகள் மூலம் பெறப்படும் நிகழ்நேரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மண்சரிவு முன்னெச்சரிக்கைகளை விடுக்கின்றது.

இந்த முன்னெச்சரிக்கைகள் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே விடுக்கப்படுவதுடன், மழைவீழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய உரிய வகையில் புதுக்கப்பிக்கப்படுகின்றன.

மேலும், இந்த முன்னெச்சரிக்கைகள் பிராந்திய மட்டத்தில் விடுக்கப்படுவதுடன், அடையாளம் காணப்பட்ட மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆபத்தான சரிவுகளுக்கு அருகில் வசிக்கும் மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிராந்திய மட்டத்தில் விடுக்கப்படும் முன்னெச்சரிக்கையானது ஒரு முழுப் பிரதேசத்தையும் உள்ளடக்கியதாக விடுக்கப்பட்டாலும், அப்பிரதேசத்தினுள் உள்ள நிலையற்ற இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தே அறிவிக்கப்படுகிறதே தவிர, முழுப் பிரதேசமும் மண்சரிவுக்கு உள்ளாகும் என இதன் மூலம் அர்த்தப்படாது.

இந்தப் பிராந்திய முன்னெச்சரிக்கைகளை விடுக்கும் முறைமையானது, உலகின் ஏனைய நாடுகள் பயன்படுத்தும் நிலையான அறிவியல் முறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இது போன்ற (மண்சரிவு போன்ற) இயற்கை நிகழ்வுகளை முகாமைத்துவம் செய்வதற்குள்ள விஞ்ஞான முறைமைகளில் மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த அனர்த்தம் நம் அனைவருக்கும் ஒரு சவாலான நிலைமை என்பதால், நாம் அனைவரும் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தாமல், இந்தச் சந்தர்ப்பத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு