உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, சிறு அளவிலான மீன்பிடி நடவடிக்கைகளுக்கான தேசிய செயல் திட்டத்தை (NPOA-SSF) உருவாக்குவதில் சர்வதேசப் பயிலரங்கின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத், சிறு அளவிலான மீன்பிடி நிர்வாகத்திற்கான தேசியத் திட்டத்தைத் தயாரிக்கத் தொடங்கிய தெற்காசியாவின் முதல் நாடு இலங்கை என்று பெருமையுடன் அறிவித்தார்.
மீன்வளம் மற்றும் நீர்வளங்கள் அமைச்சு, மீன்வளம் மற்றும் நீர்வளங்கள் திணைக்களம் (DFER), வங்காள விரிகுடா திட்டம் – அரசுகளுக்கிடையேயான அமைப்பு (BOBP-IGO), மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து இன்று (நவம்பர் 20) கொழும்பில் இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்தன.
இந்த ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதி உரையினை அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்திய, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை மீன்பிடி விவகாரங்களின் கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட தூதுக்குழுக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றன. மீன்பிடி பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களும் இதில் கலந்து கொண்டார்.
அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் ஆரம்ப உரையின் முக்கிய அம்சங்கள்
மீன்வளம் மற்றும் நீர்வளங்கள் அமைச்சு, BOBP-IGO மற்றும் FAO ஆகியவற்றின் கௌரவப் பிரதிநிதிகள், நட்பு நாடுகளின் கௌரவத் தூதுக்குழுவினர் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர், பின்வரும் முக்கிய கருத்துக்களை வலியுறுத்தினார்:
* சமுத்திரத்தின் முக்கியத்துவம்:
இலங்கைத் தீவின் வரலாறு முழுவதும் கடல் எமது மக்களுக்கு வழங்கியுள்ளது. இது மக்களைப் போஷித்தது, வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தியது மற்றும் எமது தீவை உலகத்துடன் இணைத்தது. எமது மீனவச் சமூகங்களின் பலம் எப்போதும் எமது தேசத்தின் பலத்தை பிரதிபலித்தது.
* அடையாளம் மற்றும் இலக்கு:
சிறு அளவிலான மீன்பிடி நடவடிக்கைகளுக்கான தேசிய செயல் திட்டம் (NPOA-SSF), நிலையான அபிவிருத்தியில் இலங்கையின் தலைமைத்துவத்தை அடையாளப்படுத்துகிறது. இது எமது மீனவச் சமூகத்தில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானோரை மேம்படுத்த முயல்கிறது மற்றும் தலைமுறை தலைமுறையாக எமது சமுத்திரச் செல்வத்தின் பாதுகாவலர்களாக இருந்தவர்களுக்கு செழிப்பு பாய்வதை உறுதி செய்கிறது.
* பிராந்தியத்தில் தலைமைத்துவம்:
FAO மற்றும் BOBP-IGO உடன் கூட்டு சேர்ந்து, இலங்கை பிராந்திய முன்னேற்றத்தின் எல்லைகளில் நிற்பது மட்டுமல்லாமல், முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குகிறது. சிறு அளவிலான மீன்பிடி நிர்வாகத்திற்கான தேசியத் திட்டத்தைத் தயாரிக்கத் தொடங்கிய தெற்காசியாவின் முதல் நாடு இலங்கை என்பதை மீண்டும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
* இறுதி அறைகூவல்:
“2025 அக்வா பிளானட் 2025 உலக மீன்வள தினத்தைக் குறிக்கும் நிலையில், ஒத்துழைப்பு, புதுமை மற்றும் சவால்களுக்கு மேல் எழுந்து, நம்மைச் சுற்றியுள்ள கடல்களில் தமது சொந்த தலைவிதியை செதுக்க எமது நாட்டிற்கு உள்ள திறனில் நாம் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்வோம்” என்று அவர் கூறினார். மேலும், சமுத்திரம் இலங்கைக்கு நிறைய வழங்கியுள்ளது, பொறுப்பு, கூட்டுறவு மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பார்வை மூலம் திரும்பி அளிப்பது இப்போது எமது கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சர்வதேசப் பயிலரங்கு, நிலையான மீன்பிடிக் கொள்கைகளை உருவாக்கவும், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மற்றும் இலங்கையின் மீனவச் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு முக்கியமான தளத்தை அமைக்கிறது. என்று தெரிவித்தார்.
By C.G.Prashanthan