தெற்காசியாவின் அணுகுமுறை குறித்து விவாதிக்க போல் கபூருக்கு அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெற்காசியாவிற்கான நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து விவாதிக்க எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) போல் கபூர் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு கொள்கையானது, நாம் ‘அமெரிக்காவிற்கே முதலிடம்’ வழங்க வேண்டும் என்பது ஆகும்.

இது தெற்காசியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தியுள்ளதுடன் எமது பங்காளிகளுக்கும் உதவியுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் எனது பணியகத்தின் பணிகளில் இதன் பலன்களை நான் ஒவ்வொரு நாளும் காண்கிறேன்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பிராந்தியம் மிகவும் முக்கியமானது.

அமெரிக்காவிற்கே முதலிடம்’ என்பது ‘அமெரிக்கா மட்டும்’ என்று பொருள்படாது. எமது இலக்குகளை அடைய, சுமையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த வாரம், ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகக் கட்டமைப்பில் உடன்பாட்டை எட்டினர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, ட்ரம்ப் நிர்வாகம் பங்களாதேஷுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது 175 மில்லியன் மக்களைக் கொண்ட பங்களாதேஷின் சந்தையை அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்குத் திறந்துவிட்டுள்ளது.

வர்த்தகத்திற்கு அப்பாற்பட்டு, ட்ரம்ப் நிர்வாகம் மூலோபாய திறன் மேம்பாட்டிற்காக மூன்று பரந்த அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றது.அவை பாதுகாப்பு ஒத்துழைப்பு, இலக்கு வைக்கப்பட்ட முதலீடு மற்றும் இராஜதந்திரம் ஆகும்.

அமெரிக்காவிற்கும் தெற்காசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பற்றி நான் இதுவரை விவாதித்தேன்.

ஆனால் மற்றொரு முக்கியமான ஒத்துழைப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது இந்தப் பிரச்சினைகளில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு.

தெற்காசியாவின் முக்கியத்துவத்தை நாம் இருவருமே அங்கீகரிக்கிறோம். பிராந்தியத்தில் மூலோபாயத் திறனை வளர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். எமது பங்காளிகள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள உதவுவதன் மூலம் அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், வலிமையாகவும், வளமாகவும் மாற்றுவோம் என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) போல் கபூர் தெரிவித்துள்ளார்.

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக