பாதாள உலக நடவடிக்கைகளுக்காக காவலில் உள்ள சந்தேகநபர்களுடன் நட்புறவைப் பேணும் சிறை அதிகாரிகள் மீது புலனாய்வு அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர்.
சந்தேகநபர்களை பொலிஸார் சட்டத்தின்படி விசாரிக்கும்போது முக்கியமான தகவல்கள் வெளியாவதைத் தடுக்க சில சிறை அதிகாரிகள் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
சில பாதாள உலக குற்றவாளிகளுக்கு தொலைபேசி வசதிகள் மற்றும் உணவு மற்றும் பான வசதிகளை வழங்கும் பல சிறை அதிகாரிகள் பற்றிய தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன.
இருப்பினும், காவலில் உள்ள பாதாள உலக குற்றவாளிகள் மீதும் பொலிஸ் மற்றும் சிறை புலனாய்வுப் பிரிவுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன.