தீவிரவாதம் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த கனடா அரசு நடவடிக்கை

இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாத நோக்கத்தில் ஈர்க்கப்படுவதை தடுக்க, நான்கு புதிய அமைப்புகள் குற்றச்சாட்டுச் சட்டத்தின் (Criminal Code) தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கனடா அரசு தீவிரவாதம் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கைகள் கனேடியர்களையும் சமூகங்களையும் மிரட்டல், வெறுப்பு, வன்முறை மற்றும் தீவிரவாதச் செயல்களில் இருந்து பாதுகாக்க உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி கீழ்க்கண்ட அமைப்புகளை பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளார்.

764, Maniac Murder Cult, Terrorgram Collective, மற்றும் இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா (ISIS/Daesh) உடன் தொடர்புடைய Islamic State–Mozambique என்ற அமைப்புகளாகும்.

கனடாவின் குற்றச்சாட்டுச் சட்டத்தின் கீழ், இப்போது இந்த அமைப்புகள் “தீவிரவாத அமைப்புகள்” என சட்டபூர்வமாக வரையறுக்கப்படுகின்றன.

இதன் மூலம் கனடிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகள் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்கவும் தடை செய்யவும் வலுவான கருவிகளைப் பெறுகின்றன.

இந்த அமைப்புகள் கனடாவில் வைத்துள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு, CSIS அல்லது RCMP-க்கு அறிவிக்கப்பட வேண்டும்.

கனடாவில் உள்ளவர்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள கனடியர்கள், இந்த அமைப்புகளின் சொத்துகளுடன் தொடர்புடைய எந்தச் செயலிலும் திட்டமிட்டு ஈடுபடுவது குற்றமாகும்.

இந்த அமைப்புகளுக்கு பயன்படும் வகையில் சொத்து, நிதி அல்லது சேவைகளை வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், இந்த பட்டியலை குடிவரவு மற்றும் அகதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்கள் முடிவுகளில் பயன்படுத்தலாம்.

764, Maniac Murder Cult, Terrorgram Collective ஆகியவை எல்லை தாண்டிய, சிந்தனையால் தூண்டப்படும் வன்முறையை நோக்கமாகக் கொண்ட (IMVE) வலைப்பின்னல்கள். இவை சமூக வலைதளங்கள் மற்றும் ஒன்லைன் கேமிங் தளங்களில் மூலம் நபர்களை சேர்த்து, தீவிரவாத விளம்பரங்கள் மற்றும் வன்முறை கருத்துக்களைப் பரப்புகின்றன.

கனடா, 764 அமைப்பை தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்ட முதல் நாடாகும்.இது குறிப்பாக குழந்தைகள் மற்றும் கனடியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Islamic State–Mozambique (IS-M) என்பது அதிகாரப்பூர்வமான ISIS அமைப்பின் ஒரு பிரிவு. இது மொசாம்பிக்கில் செயல்படும் ஆயுதத் தீவிர அமைப்பு ஆகும். நாட்டின் நிர்வாகத்தை மாற்றி, ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி அமைக்க முனைவது இதன் நோக்கமாகும்.

இதற்காக இவர்கள் பகுதிகளை கைப்பற்றுதல், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் ஊடுருவல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த அமைப்புகளை பட்டியலில் சேர்த்தது, அவற்றின் சட்டவிரோத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்து கனடாவின் பாதுகாப்பு, நுண்ணறிவு மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகள் மேலும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்க உதவும்.

இது கனடிய சமூகங்களை இன்னும் பாதுகாப்பாக மாற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

eg

பண்டிகைக் கால முட்டை விலை அதிகரிப்பு?

December 11, 2025

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மையற்றவை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின்

namal-1

நாட்டில் இடம்பெற்ற இறுதி போரின் பின் மக்கள் எப்படி இயல்பு வாழ்வுக்கு வந்தார்கள் என்பதை எம்மிடம் அறியுங்கள் – நாமல் ராஜபக்ச

December 11, 2025

இறுதி போரின் பின்னர் நடைபெற்ற மீள் குடியேற்றம் மற்றும் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்தமை தொடர்பிலான அனுபவங்களை பெற்றுக்

kaya

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கயந்த கருணாதிலக்க

December 11, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11.12.2025) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம்

g

தங்கம் விலை குறைந்தது..

December 11, 2025

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வார

mah

மகாவலி ஆற்றில் விழுந்தவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்…

December 11, 2025

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் ஒருவர் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

man

மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!

December 11, 2025

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக

Rajeepa

வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் தீர்வு

December 11, 2025

வடமராட்சி கிழக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் ஒரு தீர்வினை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினரும்,

pri

எதிர்வரும் 16 ஆம் திகதி பாலர் பாடசாலைகளும் திறப்பு

December 11, 2025

அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களில், மீண்டும் பாதுகாப்பாகத் திறக்கக்கூடிய

jail

படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக ஐவர் கைது

December 11, 2025

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் 5 பேரை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப்

ja

யாழ். அரச அதிபருக்கும் வடபிராந்திய கடற்படைத் தளபதிக்குமிடையே விசேட கலந்துரையாடல்!

December 11, 2025

வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் பி. லியனஹமகேவின் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை (10) காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில்

par

பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு சுற்றி திரிந்த மாணவன் கைது

December 11, 2025

பண்டாரவளையில் வணிக வளாகத்திற்கு அருகில் பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு சுற்றி திரிந்த மாணவன் நேற்று முன்தினம் மாலை

ss

யாழ் ஹாட்லிக் கல்லூரியின் ஆசிரியை தீ விபத்தினால் உயிரிழப்பு

December 11, 2025

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் தமிழ் ஆசிரியை உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில்