தித்வா புயல்; புசல்லாவையில் தொடரும் மண்சரிவு அபாயம்

தித்வா புயல் காரணமாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தில் புசல்லாவை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்லும் மார்க்கத்தில் இரட்டைப்பாதை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கப்பால் வவுக்கப்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவால் அப்பிரதேசம் வரை மாத்திரமே வாகனங்கள் செல்ல முடியும்.

அதே போன்று நுவரெலியாவிலிருந்து வரும் மார்க்கத்தில் தவலந்தன்னை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வழியும் மூடப்பட்டிருப்பதால் நுவரெலியா – கண்டி மார்க்கம் கடந்த ஒன்பது நாட்களாக மூடப்பட்டுள்ளது.

 

கடந்த 28ஆம் திகதியிலிருந்து புசல்லாவை நகருக்கு மின்சார விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே குடி நீர் விநியோகமும் சீரடைந்துள்ளது.

கம்பளை மற்றும் நுவரெலியா, பூண்டுலோயா மார்க்கத்தில் நகருக்கு வருவதற்கு கொத்மலை அணைக்கட்டுப் பாதை, ரொச்சல் மற்றும் மாசுவெல தோட்ட பாதைகளை மக்கள் பாவித்து வருவதுடன் சிறிய பாதைகளில் முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலமாகவே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேன்களில் செல்வதற்கு திஸ்பனை சந்தியூடாக செல்லலாம் என்றாலும் அது நீண்ட தூர சுற்றுப்பாதை என்பதால் மிக அவசரமான நிலைமைகளில் மாத்திரமே இம்மார்க்கத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சிறிய ரக லொறிகள் வாகனங்களிலேயே நகரப்பகுதிக்கு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் கட்டுக்கித்துல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 150 பேர் இன்னும் புசல்லாவை நகர் பள்ளிவாசலில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உணவை அங்கேயே சமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மின்சாரம் இல்லாத காரணத்தினால் கையடக்கத் தொலைபேசிகள் செயலிழந்துள்ளன. நகரின் இருபக்கங்களுக்குமான வீதிகளும் மண்சரிவால் மூடப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் மற்றும் வர்த்தகர்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பளை – புசல்லாவை பாதை நேற்று (6) மாலை ஓரளவுக்கு வழமைக்கு திரும்பும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது வகுகப்பிட்டிய அருகில் பாரிய கல் ஒன்று மண் அகழ்வின்போது கீழ் நோக்கி சரிய வாய்ப்புள்ளதாகவும் அந்த கல்லை அகற்றினால் பாரிய அளவு மண்மேடு கீழ் நோக்கி சரிந்து விழ வாய்ப்பு உள்ளதாகவும் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் நேற்று (6) இரவு பாதை திறந்து விடப்பட்ட சந்தர்ப்பத்தில் புசல்லாவை எரிபொருள் நிலையத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் வந்தன. இருந்தபோதும் கம்பளை – புசல்லாவை மார்க்கத்தில் முழுமையாக போக்குவரத்து செயற்பட இன்னும் இரண்டொரு நாட்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

au

“பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் உதவி

December 7, 2025

வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டு தற்போது “பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் “செயல்படுத்தப்பட்ட துணை ஊட்டச்சத்து உணவாக”

bst

சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்த கால்நடை விபரம்!

December 7, 2025

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் ​ சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,000 கோழிகளும் 400 மாடுகள் 400 ஆடுகள்

cir

நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கப்பலில் வந்த கள்ள சிகரெட்டுகள்

December 7, 2025

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு

photo-collage.png (5)

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு; அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன

December 7, 2025

அமெரிக்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் ‘தித்வா’ சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக இஇலங்கையை வந்தடைந்தன. ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில்

crim

67 வயதான கணவரை உலக்கையால் தாக்கி; கொன்ற மனைவி

December 7, 2025

பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்

ja hind

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம்

December 7, 2025

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம் யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட

1751730278-rice-hjg-L

அரிசியை வாங்கும் போது அவதானமாக இருங்கள்

December 7, 2025

வெள்ளத்தால் சேதமடைந்த அரிசி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக இருந்த நிலையில் அவை சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு விடப்பட்ட ஒரு மோசடியை

sama

மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது – சாமர சம்பத்

December 7, 2025

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பின்னர் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்

tu

சுற்றுலாப் பயணிகளின் மனிதாபிமான உதவிகள்…

December 7, 2025

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான

Education

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்…

December 7, 2025

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில்

juvan

இலங்கை மக்கள் குறித்து கனேடிய தமிழ் எம்பி முன்வைத்த கோரிக்கை!

December 7, 2025

இலங்கைக்கு வலுவான ஆதரவை கனடா வழங்க வேண்டும் என்று தமிழ் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் அழைப்பு விடுத்தார்.

ditva_4

சுனாமியை விடவும் 10 மடங்கு பொருளாதார அழிவை புயல் ஏற்படுத்திவிட்டது?

December 7, 2025

தித்வா புயல் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்பை விடவும் பத்து மடங்கு அதிகம் என