தித்வா புயல்; புசல்லாவையில் தொடரும் மண்சரிவு அபாயம்

தித்வா புயல் காரணமாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தில் புசல்லாவை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்லும் மார்க்கத்தில் இரட்டைப்பாதை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கப்பால் வவுக்கப்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவால் அப்பிரதேசம் வரை மாத்திரமே வாகனங்கள் செல்ல முடியும்.

அதே போன்று நுவரெலியாவிலிருந்து வரும் மார்க்கத்தில் தவலந்தன்னை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வழியும் மூடப்பட்டிருப்பதால் நுவரெலியா – கண்டி மார்க்கம் கடந்த ஒன்பது நாட்களாக மூடப்பட்டுள்ளது.

 

கடந்த 28ஆம் திகதியிலிருந்து புசல்லாவை நகருக்கு மின்சார விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே குடி நீர் விநியோகமும் சீரடைந்துள்ளது.

கம்பளை மற்றும் நுவரெலியா, பூண்டுலோயா மார்க்கத்தில் நகருக்கு வருவதற்கு கொத்மலை அணைக்கட்டுப் பாதை, ரொச்சல் மற்றும் மாசுவெல தோட்ட பாதைகளை மக்கள் பாவித்து வருவதுடன் சிறிய பாதைகளில் முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலமாகவே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேன்களில் செல்வதற்கு திஸ்பனை சந்தியூடாக செல்லலாம் என்றாலும் அது நீண்ட தூர சுற்றுப்பாதை என்பதால் மிக அவசரமான நிலைமைகளில் மாத்திரமே இம்மார்க்கத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சிறிய ரக லொறிகள் வாகனங்களிலேயே நகரப்பகுதிக்கு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் கட்டுக்கித்துல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 150 பேர் இன்னும் புசல்லாவை நகர் பள்ளிவாசலில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உணவை அங்கேயே சமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மின்சாரம் இல்லாத காரணத்தினால் கையடக்கத் தொலைபேசிகள் செயலிழந்துள்ளன. நகரின் இருபக்கங்களுக்குமான வீதிகளும் மண்சரிவால் மூடப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் மற்றும் வர்த்தகர்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பளை – புசல்லாவை பாதை நேற்று (6) மாலை ஓரளவுக்கு வழமைக்கு திரும்பும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது வகுகப்பிட்டிய அருகில் பாரிய கல் ஒன்று மண் அகழ்வின்போது கீழ் நோக்கி சரிய வாய்ப்புள்ளதாகவும் அந்த கல்லை அகற்றினால் பாரிய அளவு மண்மேடு கீழ் நோக்கி சரிந்து விழ வாய்ப்பு உள்ளதாகவும் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் நேற்று (6) இரவு பாதை திறந்து விடப்பட்ட சந்தர்ப்பத்தில் புசல்லாவை எரிபொருள் நிலையத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் வந்தன. இருந்தபோதும் கம்பளை – புசல்லாவை மார்க்கத்தில் முழுமையாக போக்குவரத்து செயற்பட இன்னும் இரண்டொரு நாட்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.