தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியானது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பயணமாகினர்.
தாய்லாந்தில் இலங்கை, பூட்டான், மாலைதீவு, தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்குபற்றும் இந்த சர்வதேச கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் இலங்கையில் இருந்து மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரி அணியும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணி ஆகிய இரண்டு அணிகளும் பங்குபற்றுகின்றன.