தரமற்ற நிலக்கரிப் பிரச்சினை

தரமற்ற நிலக்கரி காரணமாக நாட்டின் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மின் உற்பத்தி இழப்பை ஈடுசெய்வதற்கு, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்நிலையத்தை இயக்க வேண்டும் என வலுசக்தி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்நிலையம் மூலம் 165 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்ததாக உள்ளதால், தற்போது தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கக்கூடிய மின்சாரத்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தரவு அறிக்கைகளை மேற்கோள் காட்டி வலுசக்தி நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ குறிப்பிடுகையில், மூன்று நிலக்கரி மின் உற்பத்தி அலகுகளும் முழுமையாக இயங்கும் போது 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால் தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்துவதால் தற்போது அதிகபட்சமாக 715 மெகாவாட் மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடிகிறது.

இதன்படி, ஒரு நாளைக்கு 95 மெகாவாட் மின்சாரம் இழக்கப்படுவதுடன், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அதிக செலவில் எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் கலாநிதி விதுர ரலபனாவ சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிலக்கரித் தொகுதி ஜனவரி மாதம் 20 மற்றும் 22 ஆம் திகதிகளில் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், நெப்தாவைப் (Naphtha) பயன்படுத்தி களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்நிலையத்தை இயக்கினால், மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள உற்பத்தி இழப்பை ஈடுசெய்ய முடியும் என வலுசக்தி நிபுணர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், சர்ச்சைக்குரிய நிலக்கரி டெண்டரின் கீழ் பெறப்பட்ட நிலக்கரியின் தரம் குறித்து எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக இந்த வருடத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு நடந்தால் நாடு கடுமையான வலுசக்தி நெருக்கடியைச் சந்திக்கும் என்று மின்சாரத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நிலக்கரி கொள்வனவை நிறைவு செய்ய வேண்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக நிலக்கரியை தரையிறக்க முடியாது போகும்.

நாட்டின் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை தலா 60,000 மெட்ரிக் தொன் வீதம் குறைந்தது 38 கப்பல்களில் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் அந்த எண்ணிக்கையில் இதுவரை மூன்று கப்பல்கள் மாத்திரமே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் மின் நுகர்வில் மூன்றில் ஒரு பங்கு நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதன் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களின் உற்பத்தி குறைந்தால் நாடு கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படும்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது