தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய தேரருக்கு பயணத்தடை

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டு செல்வதற்கு பயணத்தடை விதித்துள்ளது.

குறித்த உத்தரவானது நேற்று(15.12.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வரை நீதவான் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து இந்த தேரர் தெரிவித்த வன்முறையான கருத்துக்கு எதிராக 27.10.2023இல் கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் ( (International Covenant on Civil and Political Rights) சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியது.

இந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த 08.12.2025 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரர் இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார

இந்த நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்று திங்கட்கிழமை 15ஆம் திகதி எடுத்து கொண்டபோது தேரர் முன்னிலையாகாத நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மட்டு.தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையாகினார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று முன்னிலையாக முடியவில்லை எனவும் குறித்த தேரர் தங்கியிருக்கும் மற்றும் மறைந்திருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து அவர் வெளிநாடு செல்வதற்கு பயண தடை விதித்து கட்டனை பிறப்பித்து எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்தார்.

chi'

தென் அமெரிக்க நாடான சிலியில் 35 ஆண்டுக்கு பின் மீண்டும் வலதுசாரி அரசு

December 16, 2025

சிலியின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் அதிக ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார். தென் அமெரிக்க

hong

தேசத்துரோக வழக்கு; ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபர் குற்றவாளி

December 16, 2025

ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபரும், ஜனநாயக போராளியுமான ஜிம்மி லாய், 78, சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட

au pa

‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ – ஆஸி பிரதமர்

December 16, 2025

‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என அந்நாட்டு பிரதமர் பாராட்டினார். ஆஸ்திரேலியாவில்

be

யுனைட்டெட் – போர்ண்மெத் போட்டி சமநிலையில்

December 16, 2025

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர்

saba3

பெண்கள் டென்னிஸ்; சிறந்த வீராங்கனையாக சபலெங்கா

December 16, 2025

தரவரிசையில் ஆண்டு முழுவதும் முதலாமிடத்தில் இருந்ததைத் தொடர்ந்து பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரஸின் அர்யனா சபலெங்காவை

de

பொரெஸ்டிடம் தோற்ற டொட்டென்ஹாம்

December 16, 2025

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம்

pre

பிரிமியர் லீக் ஏலம்: யாருக்கு ‘ஜாக்பாட்’

December 16, 2025

இந்தியாவில், பிரிமியர் லீக் (‘டி-20’) 19வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட

ru

ரஷ்ய ஏவுகணை எரிபொருள் ஆலைகள் மீது அதிரடி தாக்குதல்

December 16, 2025

ரஷ்ய எரிவாயு பதப்படுத்தும், ஏவுகணை எரிபொருள் ஆலைகளைத் தாக்கியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. தெற்கு ரஷ்ய நகரமான அஸ்ட்ராகானில் உள்ள ஒரு

bre

தெற்கு பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர சிலை

December 16, 2025

தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை திங்கட்கிழமை

rail

18 நாட்களுக்கு பின் கிழக்கு ரயில் ஓடுகிறது…

December 16, 2025

வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்கள், பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்த பதினெட்டு நாட்களுக்குப் பிறகு, இன்று (16) காலை முதல்

thi

முன்னாள் சபாநாயகர் ஏற்படுத்திய விபத்து சபைக்கு வருகிறது

December 16, 2025

முன்னாள் சபாநாயகர் எம்.பி. அசோக ரன்வல ஓட்டிச் சென்ற வாகனம் விபத்தை ஏற்படுத்தியதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை

Judment

ஒருவரைத் தாக்கி பற்களை உடைத்த பிரதேச சபை உறுப்பினருக்குப் பிணை

December 16, 2025

பொலன்னறுவை, லங்காபுர பகுதியில் ஒருவரைத் தாக்கி நான்கு பற்களை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லங்காபுர பிரதேச சபை உறுப்பினரை ஒரு