தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஏன் அவசியம்? ; பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் என்பவற்றின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்pன் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸ{க்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்புக்கு தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் வெள்வேறு காரணங்களினால் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை லோரா போஃபில்ஸ{டன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கும் பங்கேற்றிருந்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் குறித்தும் மிக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியம், நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்தவேண்டியதன் அவசியம், மனித உரிகைளைப் பாதுகாத்தல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தல், ஜனநாயக மற்றும் சட்டவாட்சி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அதேபோன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அவர்களுக்கான சமத்துவம், அடிப்படை உரிமைகள், கண்ணியம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்து தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அத்தோடு இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதியானதும், கண்ணியமானதும், நிலையானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அரசியல் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் அவர்கள் பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்தனர்.

அதேவேளை ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தல், அரசியல் பொறுப்புணர்வை மேம்படுத்தல், நல்லாட்சியை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார மீட்சிக்கு சமாந்தரமான அரசியல் முன்னேற்றம் என்பன நாட்டின் எதிர்கால நலனுக்கு இன்றியமையாதவையாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லாட்சி மற்றும் நிலையான அரசியல் தீர்வை என்பவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு பிரித்தானியா வழங்கிவரும் ஆதரவுக்கு தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் தமது நன்றியை வெளிப்படுத்தினார்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட

hindutamil-prod_2026-08-08_ozeaw6pt_mutharasan

“கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக த.வெ.க. அரசு செயல்படுகிறதா?” – முதலமைச்சருக்கு முத்தரசன் கேள்வி!

August 24, 2026

கும்பகோணம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன்,

images (9)

“தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – 10,000 ஏரிகள் வறண்டதால் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

August 24, 2026

சென்னை தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டுள்ளதைக் சுட்டிக்காட்டி, உடனடியாகத் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க

vck-tvk

“ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாகிறதா த.வெ.க?” – விசிக சரமாரி கேள்வி!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஊழல் பின்னணி கொண்டவர்களைத் தங்கள் கட்சியில் இணைத்து வருவதாகக்

images - 2026-08-24T175653.807

“3 கோப்புகளை ஒரு வாரத்திற்குள் முதலமைச்சர் வெளியிட வேண்டும்!” – துரைமுருகன் அதிரடி சவால்!

August 24, 2026

வேலூர் வேலூர் காட்பாடி காந்திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், த.வெ.க.வினரின் விமர்சனங்களுக்கும், முதலமைச்சர் விஜய்யின்

collage-1755054530

“வகுப்பறை முதல் ஆய்வகம் வரை!” – அரசுப் பள்ளிகளின் ரூ.4,200 கோடி உள்கட்டமைப்புத் தேவைகள் பட்டியல் வெளியீடு!

August 24, 2026

சென்னை அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராகத் தரம் உயர்த்தும் நோக்கில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்

Ex0nP5VXEAEUsfN

1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகள் மின்பதிவாக்கம்: இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு முயற்சி!

August 24, 2026

மதுரை தமிழகக் கோவில்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட மன்னர் காலக் கொடைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய அரிய ஓலைச்சுவடிகளை வருங்காலத்