தமிழ் கட்சிகள் ஒருமித்து கிவுல் ஓயா திட்டத்தை முற்றாக எதிர்க்கும் வகையில் செயற்படத் தீர்மானம்!

தமிழ் கட்சிகள் ஒருமித்து, ஐக்கியமாக செயல்பட்டால் இழந்த உரிமைகளை மீட்டு பெற முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று(05-02-2026) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடனும், சிங்களக் குடியேற்றங்கள் கொண்டு வரும் நோக்கத்துடனும் ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் கிபுல்ஓயா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கிடையிலான நில ரீதியான தொடர்புகளை அறுக்கவும், சிங்கள குடியேற்றங்களின் மூலம் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைக்கவும் இந்த நீண்டகாலத் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து, பிரேமதாச, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால் சிறிசேன தலைமையில், தற்போது அநுர அரசு காலத்திற்கும் தொடரப்படுகிறது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் சிறிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று இந்த திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்பு, குடிநீர் வசதி, காணி போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, 4000 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டு, சிங்கள குடியேற்றங்களை நிறுவ இன்றைய ஆட்சி செயல்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எனக்கு சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

நான் அதனை முழுமையாக மறுக்கிறேன், அது அப்பட்டமான கருத்தாகும் என்றும், அவரது காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்.

ஆரம்பத்திலேயே நாடாளுமன்ற உரைகளில் இந்த விடயங்களை பேசியும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தேன். சிறிய வயதிலேயே இந்த பிரதேசத்தில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, தமிழரின் உரிமைகள் மீட்க போராடியுள்ளேன்.

திருகோணமலையில், எனது அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டபோதும், நான் எந்த ஆட்சியிலும் சிங்கள குடியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக இல்லை. ஆனால், அந்த அரசாங்கங்களை பயன்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

நாங்கள் ஒருமித்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சியின் அடிப்படையில், சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.

தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும், தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், இழந்த உரிமைகளை மீட்டு பெற முடியும் என வலியுறுத்தியுள்ளார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.