தமிழ்ப் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட காணியை சுவீகரிக்க அரசாங்கம் முயற்சி?

வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடி வருகின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தில் வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் 210 பேர்ச் காணி இதற்காக ஒதுக்கப்பட்டது. அந்தக் காணியை தற்போது மீள சுவீகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. தமிழ் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையைப் பறிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் வத்தளை பிரதேச சபை உறுப்பினர் காளிமுத்து தர்மரத்னம் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (31) வத்தளை நகரசபையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த காணியை அரசாங்கத்தால் மீள சுவீகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

2002ஆம் ஆண்டு வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக 210 பேர்ச்சஸில் காணியொன்று ஒதுக்கப்பட்டது. வத்தளையில் தற்போது சுமார் 9000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். 33,000 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காணப்படுகின்றன.

ஆனால் இதுவரைக் காலமும் 1 – 13ஆம் வகுப்பு வரை முழுமையான ஒரு தமிழ் பாடசாலை கூட அமைக்கப்படவில்லை. இது தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பாரிய நெருக்கடியாகவுள்ளது. முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கற்று, அதன் பின்னர் வெவ்வேறு பாடசாலைகளுக்கு செல்லவேண்டிய துரதிர்ஷ்டமான நிலைமையை தமிழ் மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். இதற்காக காலம் காலமாக நாம் போராடி வந்த நிலையில், 2018இல் எமது போராட்டத்துக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.

இது நகரசபைக்கு சொந்தமான காணியாகும். 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்போதைய அமைச்சர்களான சந்திரசேகர் மற்றும் தொண்டமான் ஆகியோர் இந்த பாடசாலையை அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். அந்த நடவடிக்கைகளும் இழுபறி நிலையிலேயே காணப்பட்டன. எனினும் 2018இல் அப்போதைய அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தலையீட்டின் கீழ் இந்தக் காணி பாடசாலைக்காக என ஒதுக்கப்பட்டது.

நகரசபையின் கீழ் காணப்பட்ட குறித்த காணி மாகாண கல்வி திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு, பிரதேசசபை அலுவலகத்தின் ஊடாக வலய கல்வி திணைக்களத்து வழங்கப்பட்டது. காணி ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அதில் பாடசாலையை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனை அடிப்படையாகக் கொண்ட இனவாத பிரச்சினைகள் சிலரால் ஏற்படுத்தப்பட்டன. அதேவேளை அந்த சந்தர்ப்பத்தில் நிதி பற்றாக்குறையெனக் கூறி பாடசாலை நிர்மாணப்பணிகள் காலம் தாழ்த்தப்பட்டன.

எனினும் நாம் எமது சொந்த நிதியை வழங்குவதாகக் கூறிய பின்னர், அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் சில தரப்பினரால் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திட்ட வரைபடமும் தயாரிக்கப்பட்டது. 2019இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அதன் பின்னரான கொவிட் பரவல் மற்றும் அரசியல் கிளர்ச்சிகளால் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் மொழி ரீதியாக பாடசாலைகளை அமைப்பதில்லை என்பது தமது கொள்கையெனக் கூறி, இந்தக் காணியை மீள கையகப்படுத்த முயற்சிக்கிறது. கடந்த வருடமாக இதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், இந்த காணியை மீள கையகப்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை. நகரசபைத் தலைவர் கூட்டம் நிறைவடைய முன்னரே அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் இந்த காணியை அரசாங்கம் மீள சுவீகரிப்பதற்கான யோசனையை முன்வைத்து, அனுமதியை பெற்றனர். எனினும் நீண்ட விவாதத்தின் பின்னர் தற்காலிகமாக இந்த யோசனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது பிரதான வீதிக்கு அருகிலுள்ள காணியாகும். ஆனால் அரசாங்கத்தால் இதுவரையில் எந்தவொரு திட்டமும் இங்கு முன்னெடுப்பதற்கு முன்மொழியப்படவில்லை. காணியை கையகப்படுத்திய பின்னர் ஏதேனும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவே திட்டமிடுகின்றனர். அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய இந்த காணி மீளப் பெறப்பட்டால் வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான எமது 25 ஆண்டு கால போராட்டம் தோல்வியடையும். அவ்வாறு தோல்வியடைவதற்கு இடமளித்துவிடக்கூடாது என்றார்.

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.