தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக போராடியவர்கள் உள்ளாட்சி நியமனத்தில் புறக்கணிப்பு?

உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்பட்டதில், பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க பொதுச் செயலர் ஜான்சி ராணி வெளியிட்டு உள்ள அறிக்கை:

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக, 3,631 மாற்றுத்திறனாளிகளை நியமித்து, முதல்வர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி.
இது, மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் ஜனநாயக உரிமையை உறுதி செய்கிறது.

இருப்பினும், எங்களது பிரதான கோரிக்கையான, உதவித்தொகை உயர்வு குறித்து, முதல்வர் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.மேலும், நியமன உறுப்பினர்கள் தேர்வில் , பல்வேறு மாவட்டங்களில் குளறுபடிகள் நடந்துள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மற்றும் அவர்களின் குறைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில், அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது.

ஆனால், இந்த பணியிடங்களுக்கு பொருத்தமான, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக போராடியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மற்றும் பிரச்னைகளை அறியாத நபர்கள், ஆளும் கட்சியினர், தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்துவோரை, அரசு உறுப்பினராக தேர்வு செய்திருப்பது வேதனை அளிக்கிறது.

அதேபோல், மாவட்டங்களில் உறுப்பினர் நியமனத்திற்காக, கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, சில மாவட்டங்களில் கூட்டப்படாமல், உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர். எனவே, தேர்வு செய்யப்பட்ட நபர்களில் தகுதியற்றவர்களை மாற்றும் வகையில், உள்ளாட்சி நியமன உறுப்பினர்களின் தேர்வை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

December 8, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி

chand

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

December 8, 2025

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்

Judment

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

December 8, 2025

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

old

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

December 8, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல

water fal

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?

December 8, 2025

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு

nuw

டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

December 8, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர