2026 சட்டமன்ற தேர்தல் தேதி வருகிற மார்ச் 1 வாரத்தில் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்ட மன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடந்த ஓராண்டாகவே தேர்தலுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் வருகிற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் தேதி தற்போது தள்ளிபோக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில்தான் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பணிகள் முடிந்து இறுதி கட்ட வாக்காளர் பட்டியல் கடந்த 23 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.
நடந்து முடிந்த எஸ்.ஐ.ஆர் பணிகளின் அடிப்படையில் தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். முதற்கட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தவர்கள் மீண்டும் தங்களின் பெயர்களை சேர்க்க அவகாசம் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுக்க 23 -ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியாகியிருந்தது. இந்த சூழலில் தமிழகத்தில் 5. 67 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசினை தேர்வு செய்தாக வேண்டும் இந்த சூழலில் தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்தின் சிறப்பு குழுக்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு தமிழ்நாட்டிற்கான தேர்தல் நடைபெறும் தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்பட்ட சூழலில் தற்போது தமிழகத்திற்கான தேர்தல் நாள் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதன் பேரில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் 250 நீதிபதிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கொல்கத்தா நீதிமன்றம் பதில் அளித்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல் நடக்கவிருப்பதாலும், மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் தள்ளிப்போவதாலும் தமிழகத்தின் தேர்தல் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.