தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை என்று அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இங்கு நுண்​பார்​வை​யாளர்​கள், துப்​பாக்​கிய ஏந்திய போலீ​ஸார் அல்​லது துணை ராணுவப் படை​யினர் நிறுத்தப்பட்​டுள்​ளனர்.

அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் குடிநீர், கழி​வறை, தடையற்ற மின்​சா​ரம், அவசர மருத்​து​வம், கைப்​பிடி​யுடன் கூடிய சாய்​வுதளம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு சக்கர நாற்​காலி, நிழற்​பந்​தல், வாக்காளர்​களுக்கு உதவ தன்​னார்​வலர்​கள் ஏற்​பாடு என அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

வாக்​குச்​சாவடிக்​குள் செல்​போன் கொண்​டு​செல்ல அனு​மதி இல்லை என்​ப​தால், நுழைவு​வாயி​லில் செல்​போனை பாது​காப்​பாக வைக்​க​வும் முதல்​முறை​யாக வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

இத்​தேர்​தலில் 1,06,408 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்படுத்​தப்​படு​கின்​றன. கூடு​தலாக 20 சதவீத இயந்​திரங்​கள் தயார் நிலை​யில் உள்​ளன.

துணை ராணுவம் ரோந்து: பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்கள் 24 மணி நேர​மும் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

வாக்​குச்​சாவடி பணி​யில் சுமார் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​பட்​டுள்​ளனர். தேர்​தல் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளவர்களில் நேற்று வரை 4.18 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களை பதிவு செய்​துள்​ளனர். வாக்​குச்​சாவடிகளுக்கு வாக்​குப்​ப​திவு இயந்திரங்​களை அனுப்​பும் பணி நேற்று காலை 11 மணி முதல் தொடங்​கியது.

அதனுடன் உரிய படிவங்​கள், சீல் வைக்க தேவை​யான அரக்​கு, மெழுகு​வத்​தி, அழி​யாத அடை​யாள மை உள்​ளிட்ட பொருட்​களும் அனுப்பி வைக்​கப்​பட்​டன. சென்னையில் தேர்தல் ​பணி​களை, 10 நாடு​களைச் சேர்ந்த 20 பிர​தி​நி​தி​கள் கொண்ட சர்​வ​தேசக் குழு​வினர் நேற்று பார்​வை​யிட்​டனர்.

வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்​குச்​சாவடிகளின் உள்ளே மற்​றும் வெளியே தலா ஒரு கண்​காணிப்பு கேமரா என மொத்​தம் 1.50 லட்சம் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

தமிழகம் முழு​வதும் பதி​வாகும் கேமரா காட்​சிப் பதிவு​களை, சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலு​வல​கத்​தில் இருந்து மாவட்ட வரு​வாய் அலு​வலர் நிலை​யில் உள்ள 18 அதிகாரி​கள் கொண்ட குழு​வினர் கண்​காணிப்​பார்​கள் என்று தலைமைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​தார்.

death

தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

April 23, 2026

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை வீதி, 5ஆம் கட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில், சித்திரை புத்தாண்டுக்கு முந்தைய தினமான

v

விண்வெளியில் அபூர்வ நிகழ்வு: வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை தலைகீழாக மாற்றியது

April 23, 2026

விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை நேரடியான ஆதாரங்கள் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வை வானியலாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். 41P/Tuttle–Giacobini–Kresák என்று அழைக்கப்படும்

download

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது – இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி

April 23, 2026

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ (Pre-war) காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் பிரிட்டன் இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் சர் பேட்ரிக்

rat

இரத்னபுரியில் தீ பரவல் ; 90 கடைகள் எரிந்தன!

April 23, 2026

சுமார் 90 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக இரத்னபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று அடுக்குகளை கொண்ட இந்த சந்தை வளாகத்தின் இரண்டாவது

5

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் 30 கோடி ரூபாய் பணம் பூசகரின் வங்கிக் கணக்கில்?

April 23, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த

ne

அபாயகரமான நெகிழி மணிகள் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில்…

April 23, 2026

இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான ‘எம்.எஸ்.சி. எலசா III’ (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள்

vikatan_2026-04-23_pjv1ud9i_WhatsApp-Image-2026-04-23-at-9.38.15-AM

தமிழக சட்டசபை தேர்தல்: பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு! திருப்பூர், நாமக்கல் மாவட்டங்கள் முதலிடம்!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதிய

lpl

லங்கா பிறீமியர் லீக் ஜூலையில் ஆரம்பிக்கிறது

April 23, 2026

லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) ஜூலை 10ஆம் திகதி முதல் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டிகள்

Sen

காவத்தை சம்பவத்துக்கு தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

April 23, 2026

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அமைக்கப்பட்ட வீட்டை மர்ம கும்பல் ஒன்று உடைத்து

Mid photos new.00_01_58_09.Still038

“வாக்களிப்பது அடிப்படை உரிமை; தடையாக இருக்காதீர்கள்!” – 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் கேட்டு விஜய் அதிரடி கடிதம்!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்து

1dff8c40-3e62-11f1-8887-e93160959470.jpg

காலை 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குப்பதிவு: வெயிலையும் பொருட்படுத்தாமல் குவியும் வாக்காளர்கள்!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை வெயில்

678180996_3486131861565495_4435347561176496228_n

வவுனியாவில் புகையிரதமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து ஒருவர் பலி

April 23, 2026

இன்று (23) காலை வவுனியா திருநாவற்குளம் பகுதியில் புகையிரதமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர்