தமிழகத்தில் பருவமழை பெய்தும் நிரம்பாத நீர்த்தேக்கங்கள்

வடகிழக்கு பருவமழை கொட்டியும், 16 அணைகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டிஉள்ளன.

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., இவற்றில் மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 அணைகள், கொள்ளளவில் பெரியவை.

இவற்றின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., மற்ற அணைகள் 1 டி.எம்.சி.,க்கும் குறைவான கொள்ளளவு உடையவை.

அதிக மழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தான், பெரும்பாலான அணைகள் உள்ளன. இவற்றுக்கு தென்மேற்கு பருவமழை காலங்களில், அதிக அளவில் நீர் வரத்து கிடைக்கிறது.

அண்டை மாநிலங்களான, கேரளா, கர்நாடகா வழியாகவும் பல அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது. தற்போது, மாநிலம் முழுதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் புழல்; தர்மபுரியில் நாகாவதி, வறட்டாறு; கிருஷ்ணகிரியில் சூளகிரி சின்னாறு; திருப்பத்துாரில் ஆண்டியப்பனுார் ஓடை; வேலுாரில் மோர்தானா, ராஜா தோப்புகனார்.

தென்காசியில் குண்டாறு, அடவிநைனார் கோவில்; தேனியில் சோத்துப்பாறை; திண்டுக்கல்லில் வர்தமாநதி, குதிரையாறு; ஈரோட்டில் குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம்.

கோவையில் பரம்பிக்குளம், துணக்கடவு பெருவாரிபள்ளம் ஆகிய 16 அணைகள், 96 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. திருவள்ளூர் பூண்டி, தேர்வாய் கண்டிகை; காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம்; தர்மபுரி சின்னாறு, வாணியாறு; திருவண்ணாமலை சாத்தனுார்.

திண்டுக்கல் மருதாநதி; கோவை ஆழியாறு; ஈரோடு பவானிசாகர்; கரூர் நொய்யல் ஆத்துப்பாளையம்; சேலம் மேட்டூர் ஆகியவற்றில், 90 முதல் 95 சதவீதம் நீர் இருப்பே உள்ளது.

மேலும் 76 சதவீதத்திற்கு மேல் 29 அணைகள், 51 சதவீதத்திற்கு மேல் 19 அணைகள், 25 சதவீதத்திற்கு மேல் 15 அணைகள் நிரம்பிஉள்ளன.

மொத்தமுள்ள 90 அணைகளில், 196 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. பருவமழை இம்மாதம் இறுதி வரை உள்ளதால், அணைகளுக்கு மேலும் நீர்வரத்து கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

December 8, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி

chand

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

December 8, 2025

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்

Judment

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

December 8, 2025

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

old

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

December 8, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல

water fal

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?

December 8, 2025

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு

nuw

டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

December 8, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர