தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

பயணிகள் போக்குவரத்து சேவையின்போது தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு செல்ல தீர்மானித்திருக்கிறோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

மேல்மாகாணத்தில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு அசெளகரியங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இவர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் 20ஆம் திகதி மேல் மாகாணத்தில் பணிபகிஷ்கரிப்புக்கு செல்ல தீர்மானித்திருந்தோம்.

என்றாலும் பணி பகிஷ்கரிப்புக்கு செல்ல முன்னர் இதுதொடர்பில் மேல்மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி, அந்த கலந்துரையாடல் வெற்றியடையாவிட்டால், பணிபகிஷ்கரிப்புக்கு செல்ல தற்போது தீர்மானித்திருக்கிறோம். இதுதொடர்பில் நாங்கள் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

மேல் மாகாணத்தில் கடந்த காலங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு தற்போது பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பஸ்ஸில் ஏற்படுக்கின்ற சிறியதொரு குறைபாட்டுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய பணியையே இவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறு செயற்படுவதற்கு சட்டத்தில் அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஆனால் இன்று மேல்மாகாணத்தில் பஸ் ஊழியர்கள் பல்வேறு தேவைகளேடு இருக்கிறார்கள். அவர்களுக்கு மலசலகூட வசதி இல்லை. பஸ் வண்டியை நிறுத்தி வைப்பதற்கு இடமில்லை. குடிநீர் வசதி இல்லை. இந்த வசதிகளை செய்துகொடுக்காமல் அசெளகரியங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.எமக்கு தேவையான வசதிகளை செய்து தந்து, அதனை சட்டத்துக்குட்படுத்திய பின்னர் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுத்தால், அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.

இன்று எங்களுக்கு பாரியளவில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இல்லாத பிரச்சினை இருந்து வருகிறது. இவ்வாறான நிலையில், சிறிய தவறுக்கும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின சேவை தடை செய்யப்படுகிறது. அதனால் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராகவே பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எனவே மேல்மாகாண ஆளுநருடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து