‘டிலைட்’ படுகொலையின் பின்னணி

மாத்தறை – தேவேந்திர முனையில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, குறித்த நபருக்கு இருந்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியிலேயே இடம்பெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் கார் ஒன்றில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதலில் 55 வயதான சிரில் ஹேந்தவித்தாரண என்ற “டிலைட்” என அழைக்கப்படும் மீன் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றின் மீதும் 2023 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில், அவர் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் ரோந்துப் புத்தகம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபரைப் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்த போதிலும், அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். இன்றைய தினமும் அவர் கந்தரவிலிருந்து தெவிநுவரவிற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

அவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொல்லப்பட்ட நபரின் சகோதரரும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரைக் கொலை செய்வதற்காகத் துப்பாக்கிதாரிகள் மோட்டார் கார் ஒன்றிலேயே வந்துள்ளதுடன், அவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். இதற்கமைய, சந்தேகநபர்களைக் கைது செய்வதப்பதற்காக 6 பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில், கொலையாளிகள் வந்ததாகக் கூறப்படும் மோட்டார் கார் மாத்தறை, அமலகொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று கொல்லப்பட்ட சிரில் ஹேந்தவித்தாரண எனப்படும் “டிலைட்” என்பவரால் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் எல்லகந்த ஆரண்ய சேனாசனம் அமைந்துள்ள காட்டுப்பகுதியில், பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘தெவிநுவர தமிழ்’ என்பவரின் நெருங்கிய சகாவான ‘ஜுங்கய்யா லால்’ என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அந்தக் கொலையைத் தொடர்ந்து, ‘தெவிநுவர தமிழ்’ என்பவர் ‘டிலைட்’ தரப்பினரை இலக்கு வைத்து அவர்கள் பயணித்த வேன் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். எவ்வாறாயினும், அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களுக்குக் குறித்த குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், மேன்முறையீட்டின் ஊடாக அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், ‘டிலைட்’ என்பவர் ‘தெஹிகெதர பாலே’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆனால், பிற்காலத்தில் ‘தெஹிகெதர பாலே மல்லி’ என்பவரால் மேற்கொள்ளப்படும் ஹெரோயின் வர்த்தகத்தின் ஒரு பகுதியை ‘டிலைட்’ திருடியுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த நபர் ‘தெஹிகெதர பாலே மல்லி’யின் எதிர்த் தரப்பான ‘உனக்குருவே சாந்த’ என்பவருடனும் தொடர்பைப் பேணியுள்ளதுடன், அதற்கமைய இரண்டு தரப்பினரதும் தகவல்களை இரு தரப்பிற்கும் வழங்கியமையினாலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் தற்போது சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கந்தர பிரதேசத்தில் உயிரிழந்த இந்த நபருக்கு மேலதிகமாக மேலும் 16 பேருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பொலிஸார் தமது பாதுகாப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு

mahm

அஹ்மதிநிஜாத் படுகொலை; இலங்கையின் உற்ற நண்பரை இழந்து விட்டோம் – நாமல் ராஜபக்ச இரங்கல்

March 3, 2026

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது ஆழ்ந்த இரங்கலைத்

thul

துலீப் மெண்டிஸ் பதவி விலகல்

March 3, 2026

கடந்த 14 ஆண்டுகளாக ஓமான் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றி, அந்த அணியை சர்வதேச மட்டத்தில்