டாக்கா பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளதால் பதற்றம்

வங்கதேசத்தில் உள்ள டாக்கா பல்கலையில், இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து, நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.

துப்பாக்கி சூடு இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. 2026 பிப்., 12ல், அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து வங்கதேசத்தில் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. ஷேக் ஹசீனா ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக இருந்த இன்குலாப் மாஞ்சோ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி, கடந்த வாரம் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரை தொடர்ந்து, மத நிந்தனை செய்ததாக கூறி, தீபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞர் வன்முறை கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். ஆத்திரம் அடங்காத கும்பல், அவரது உடலை மரத்தில் கட்டி வைத்து தீயிட்டு கொளுத்தினர்.

குற்றச்சாட்டு இதே போல பல்வேறு இடங்களில், குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வங்கதேசத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு இந்தியா தான் காரணம் என, அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், இடைக்கால அரசும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் டாக்காவில் உள்ள டாக்கா பல்கலையில் நேற்று நடந்த பேரணியில், இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் பங்கேற்றவர்கள், ‘நான் ஹாதி; நான் ஹாதி’ என முழக்கமிட்டனர். மேலும், ஹாதி கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையே, பல்கலையில் உள்ள ஒரு உணவகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல், இடைக்கால அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்