ஜனாதிபதி அரச ஊழியர்களிடம் கோரிக்கை

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தினார்.

அங்கு அவர், அரச ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, டித்வா அனர்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அந்த அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்காக திறைசேரியிலிருந்து 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்காக எவ்வித பணமும் கடனாகப் பெறப்படவில்லை எனவும், எவ்வித பணமும் அச்சிடப்படவில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.

அச்சந்தர்ப்பத்தில் திறைசேரியின் கணக்கில் 120,000 கோடி ரூபாய் இருந்ததாகவும், எனவே இந்த 50,000 கோடி ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

டித்வா அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என உலக வங்கி கணிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 4% எனவும், அரசாங்கம் முன்னெடுத்த வலுவான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பிலிருந்து மீள முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை