ஜனாதிபதியும் பிரதமரும் மன்னிப்புக் கேட்காவிட்டால் பௌத்த விரோதத்துக்கு எதிராக போர் தொடுப்போம்!

வடக்குக்கு சென்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரணி அமரசூரிய ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கொட்டபிட்டிய ராவுல தேரர் தெரிவித்துள்ளார்.

அதாவது வடக்குக்கு பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு வரும் தென்பகுதியினர் வைராக்கியத்தை விதைப்பதாக ஜனாதிபதி கூறிய விடயம் மற்றும் பிரதமர் மன்னாரில் தெரிவித்த கருத்தான, யுத்தத்தை எங்களை கேட்டா மேற்கொண்டனர் என்ற கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் பௌத்த மகா சம்மேளனத்தில் இன்று (20.02.2026)உரையாற்றும் போதே கொட்டபிட்டிய ராவுல இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நீங்கள் நேர்மையாக நடவுங்கள். நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக எங்கேயும் இரகசியமாக கதைக்க முடியாது. இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் அனைவரும் அறிந்து கொள்வர்.

பிரதமர் ஹரிணி, மன்னாரில் நீங்கள் தெரிவித்த கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக அந்த கருத்துக்களை மீளப் பெற்றுக் கொள்ளவும்.

ஜனாதிபதி, தவறுதலாக சொல்லிவிட்டேன் மன்னிக்கவும் என்று சொன்னால், நாங்கள் மன்னிப்போம். அப்படியில்லை என்றால் அந்த கருத்துக்களை அப்படியே வைத்துக் கொண்டு பௌத்த விரோதத்துக்கு எதிராக போர் தொடுப்போம்.

வடக்கு, கிழக்கில் 1000 திற்கும் மேற்பட்ட புராதன தொல்பொருள் இடங்கள் இருக்கின்றன. கிழக்கில் சில இடங்களின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. அதை உடனடியாக மீள் அமைக்க வேண்டும் என ஜனாதிபதியை கோருகிறோம்.

எமது பௌத்த புராதன தொல்பொருள் மற்றும் எமது சம்பிரதாயங்கள் இல்லாதொழிக்கப்படுகின்றன.இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு சிங்கள கிராமமே நாவற்குழியாகும் அதை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு