ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்குத் தேவை – தலதா அத்துகோரல

சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனமானவை.பொலன்னறுவையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்து பாராளுமன்ற சமையலறையை துப்பரவு செய்கிறார்.கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை. சபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அவமதிப்பதாகவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மாறுப்பட்ட அரசியல் கொள்கை மற்றும் நிலைப்பாட்டை கொண்டுள்ள நாங்கள் அனைவரும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பொது இலக்குடன் ஒன்றிணைந்துள்ளோம்.இந்த ஒன்றிணைவு அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது.

ஜனநாயகம் இல்லாதொழிந்தால் அது ஒட்டுமொத்த மக்களுக்கு மக்களின் வாழ்க்கையையும் அழிக்கும். ஆகவே ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உண்டு.

75 ஆண்டுகால அரசாங்கங்களை சாபம் என்று விமர்சித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததது. 75 ஆண்டுகாலத்தை சபிக்கும் இந்த ஆட்சியாளர்கள் இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் ஆகிய துறைகளின் உச்சபயனை பெற்றுக்கொண்டார்கள்.

போலியான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளாத இளம் தலைமுறையினர் மக்கள் விடுதலை முன்னணியின் வெறுப்பு பேச்சுக்கு உத்வேகமடைந்து ஆதரவளித்தார்கள்.வெகுவிரைவில் அவர்கள் உண்மையை விளங்கிக்கொள்வார்கள்.

சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனமானவை.பொலன்னறுவையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்து பாராளுமன்ற சமையலறையை துப்பரவு செய்கிறார்.கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை. சபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அவமதிப்பதாகவுள்ளது. பதவி காலம் முடிவடைந்தவுடன் வீடு செல்ல வேண்டும் என்பதை சபாநாயகர் நினைவில் வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்