சேதமடைந்த வீடுகள் குறித்து வௌியான அறிவிப்பு

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளில், அதிகளவான வீட்டுச் சேதங்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில், இந்த அனர்த்தத்தினால் இதுவரை கண்டி மாவட்டத்தில் 1,568 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த மாவட்டத்தில் 14,111 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இரண்டாவது அதிகளவான வீட்டுச் சேதங்கள் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 767 வீடுகள் முழுமையாகவும், மேலும் 3,742 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

மூன்றாவது அதிகளவான வீட்டுச் சேதங்கள் புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 627 வீடுகள் முழுமையாகவும், மேலும் 20,813 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முறையே குருநாகல் மாவட்டத்தில் 594 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 578 வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 317 வீடுகளும், அனுராதபுர மாவட்டத்தில் 234 வீடுகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 225 வீடுகளும் இந்த அனர்த்தத்தினால் முழுமையாக அழிவடைந்துள்ளன.

இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 86,147 குடும்பங்களைச் சேர்ந்த 330,443 நபர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கண்டி மாவட்டத்தில் 80,375 குடும்பங்களைச் சேர்ந்த 287,364 நபர்களும், கண்டி மாவட்டத்தில் 54,716 குடும்பங்களைச் சேர்ந்த 171,127 நபர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 27,234 குடும்பங்களைச் சேர்ந்த 90,140 நபர்களும், குருநாகல் மாவட்டத்தில் 26,474 குடும்பங்களைச் சேர்ந்த 88,899 நபர்களும், மன்னார் மாவட்டத்தில் 23,704 குடும்பங்களைச் சேர்ந்த 77,694 நபர்களும், கேகாலை மாவட்டத்தில் 23,324 குடும்பங்களைச் சேர்ந்த 83,482 நபர்களும், அனுராதபுர மாவட்டத்தில் 22,562 குடும்பங்களைச் சேர்ந்த 74,084 நபர்களும், பதுளை மாவட்டத்தில் 22,257 குடும்பங்களைச் சேர்ந்த 73,547 நபர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 19,092 குடும்பங்களைச் சேர்ந்த 74,277 நபர்களும் அனர்த்தத்தினால் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களாகப் பதிவாகியுள்ளன.

அத்துடன், ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை 640 என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதில் அதிகளவான உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 234 ஆகும்.

இரண்டாவது அதிகளவான உயிரிழப்புகள் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 90 ஆகும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரிழப்புகளும், குருநாகல் மாவட்டத்தில் 61 உயிரிழப்புகளும், புத்தளம் மாவட்டத்தில் 36 உயிரிழப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 உயிரிழப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 29 உயிரிழப்புகளும் அதிகளவான மரணங்களாகப் பதிவாகியுள்ளன.

மேலும், ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் உள்ள 847 பாதுகாப்பு முகாம்களில் 26,103 குடும்பங்களைச் சேர்ந்த 82,813 நபர்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகளவான பாதுகாப்பு முகாம்கள் கண்டி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 279 பாதுகாப்பு முகாம்களில் 7,952 குடும்பங்களைச் சேர்ந்த 27,227 நபர்கள் தங்கியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக அதிகளவான பாதுகாப்பு முகாம்கள் நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அது 211 ஆகும்.

அங்கு 6,652 குடும்பங்களைச் சேர்ந்த 20,825 நபர்கள் தங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 147 பாதுகாப்பு நிலையங்களும், கேகாலையில் 104 பாதுகாப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் முறையே 5,856 குடும்பங்களைச் சேர்ந்த 17,444 நபர்களும் மற்றும் 2,980 குடும்பங்களைச் சேர்ந்த 8,658 நபர்களும் தங்கியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

man

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வெளியீடு

December 14, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை பாதுகாப்பு அமைச்சகம்

mihi

மிகிந்தலையில் பாரிய வெடிப்புக்கள்?

December 14, 2025

மிகிந்தலை விகாரையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று (14.12.2025) தேசிய கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களத்தின் அநுராதபுரம்

1751730278-rice-hjg-L

அனர்த்தம் ஏற்பட்டிருந்தும் கூட எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாய அமைச்சர்

December 14, 2025

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில

arre

ஹேரோயினை கடத்த முற்பட்டவர் கைது

December 14, 2025

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக

3 dd

டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

December 14, 2025

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

gun

காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

December 14, 2025

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

HAri

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு!

December 14, 2025

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர்

Mujibar Rahuman

குழு ஒன்று முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

December 14, 2025

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்

ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!

December 14, 2025

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை

சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடைகின்றது?

December 14, 2025

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு,