கனடாவிலிருந்து கிட்டத்தட்ட 1 ட்ரில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீட்டு மூலதனம் வெளியேறியுள்ளதைத் தடுத்து, உலகளாவிய முதலீட்டாளர்களை மீண்டும் ஈர்ப்பதற்காக இரண்டு நாள் முதலீட்டு உச்சி மாநாடு ஒன்றை நடாத்த பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய திட்டங்களில் முதலீடு செய்ய வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம், முதலீடுகளை அதிகரிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது போன்றவற்றுக்கு இந்த உச்சி மாநாடு முக்கியத்துவம் அளிக்கும்.
இந்த நிகழ்வானது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பல ஆண்டுகளாகக் குறைந்துவரும் வெளிநாட்டு முதலீட்டுப் போக்கை மாற்றியமைக்கவும் உதவும் என அரசாங்கம் நம்புகிறது.