சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை திரட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அனர்த்த தகவல் மையம் உதயம்!

டித்வா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று அனர்த்த தகவல் மையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முடிந்த மட்டத்தில் ஏதேனும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மையம் ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி, பொறுப்போடும் வகைகூறலோடும் வெளிப்படையாகவும் நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் முகமாக உரிய தரப்போடும், நிவாரண குழுக்களோடும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் அறியாமை, அரசியல் காரணங்கள் போன்றவற்றால் நிவாரணம் கிடைக்காத சூழ்நிலை காணப்படுவதனால், இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வோர் குறித்த பிரச்சினைகள் முன்வைத்து நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அடிப்படையில் நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறாத தரப்பினர்களுக்கு இந்த மையம் ஊடாக அரசின் உரிய தரப்புகள் உட்பட தன்னார்வ அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணி முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட நிவாரண சுற்றறிக்கைகள் காணப்படுவதனால், அந்த சுற்றறிக்கைகளின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமற்ற முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது இதன் ஊடாக மேற்பார்வை செய்யப்படும். பயனாளிகளையும் நிவாரண நிறுவன வலையமைப்புகளையும் ஒன்றோடொன்று தொடர்பு பட வைத்து, நிவாரண நடவடிக்கைகளை ஒழுங்கு முறையில் பெற்றுக் கொடுப்பதற்கான தலையீடுகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.

கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோரின் பரிந்துரைகளின் பேரில் மட்டுமே உரிய நன்மைகள் உரிய தரப்பினருக்கு போய்ச் சேர வேண்டும். நிவாரணம் பெற அரசியல்மயமாக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளும் அவசியம் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆகவே இவ்விடயம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய தேவை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சமூக சேவைகள் அமைச்சின் கீழ் நலன்புரி நன்மைகள் சட்டம் காணப்படுகின்றன. யாரையும் வித்தியாசமாக நடத்துவது அடிப்படை உரிமைகளைக் கூட மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றன. நிவாரண நடவடிக்கைகளில் பாராபட்சம் காட்டக் கூடாது. பாதிக்கப்பட்ட சகலரையும் சென்றடைய வேண்டும் வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By C.G.Prashanthan

Nalinda Jayatissa

பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் துப்பரவு செய்ய அரசு நிதி உதவி

December 11, 2025

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்

boa

வடக்கு கடற்றொழிலாளர்கள் தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு

December 11, 2025

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டி வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளும் கடற்றொழில் மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளையும் தடுத்து நிறுத்த

tr

வவுனியா – யாழ்ப்பாணம் தொடருந்து பாதை சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

December 11, 2025

புயல் மற்றும் மழையின் காரணமாக பாதிப்படைந்த தொடருந்து பாதைகளை சீரமைக்கும் நடவடிக்கைகளை வவுனியா தொடருந்து திணைக்கள உத்தியோகத்தர்களும், இராணுவத்தினரும் இணைந்து

chinna

நடிகை மதுபாலா – இந்திரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘சின்ன சின்ன ஆசை’

December 11, 2025

‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை மதுபாலா- சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக அழுத்தமான

padai

ரஜினிகாந்தின் ‘படையப்பா’ ரிட்டர்ன்ஸ்

December 11, 2025

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆவது ஆண்டு பொன் விழா நிறைவு செய்வதால் அதனை கொண்டாடும்

vija4

வில்லனாக விஜய் சேதுபதி

December 11, 2025

ரவிகிரண் கோலா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ‘ரவுடி ஜனார்த்தனன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக

rupe

யாழில் பாரிய நிதி மோசடி அம்பலம்

December 11, 2025

பிரித்தானியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடம் 30 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ஒருவர் கைது

cabinet

2,284 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

December 11, 2025

அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சுக்கள், மாகாண

mar

மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025

ஐக்கிய நாடுகள் சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிர்களுடன் இணைந்து, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில்

heal

‘ஹெல்த் கேர் கனெக்ட்’ மீது ஒன்டாரியோ மாகாணத்தில் குற்றச்சாட்டு!

December 11, 2025

ஒன்டாரியோ மாகாணத்தில் குடும்ப மருத்துவர்கள் அல்லது தாதிகளைத் நாடும் நோயாளிகள், மாகாணத்தின் காத்திருப்புப் பட்டியலான ‘ஹெல்த் கேர் கனெக்ட்’ (Health

cou

ஓட்டாவா நகர சபை வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது!

December 11, 2025

ஓட்டாவா நகர சபையானது (City Council) 7.12 பில்லியன் டொலர் மதிப்பிலான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை

ca

உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கனடிய ஆயுதப் படைகள் அணிதிரட்டல்

December 11, 2025

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் கனடிய ஆயுதப் படைகள், ஒரு விரிவான மற்றும் பிரம்மாண்டமான