சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை திரட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அனர்த்த தகவல் மையம் உதயம்!

டித்வா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று அனர்த்த தகவல் மையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முடிந்த மட்டத்தில் ஏதேனும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மையம் ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி, பொறுப்போடும் வகைகூறலோடும் வெளிப்படையாகவும் நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் முகமாக உரிய தரப்போடும், நிவாரண குழுக்களோடும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் அறியாமை, அரசியல் காரணங்கள் போன்றவற்றால் நிவாரணம் கிடைக்காத சூழ்நிலை காணப்படுவதனால், இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வோர் குறித்த பிரச்சினைகள் முன்வைத்து நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அடிப்படையில் நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறாத தரப்பினர்களுக்கு இந்த மையம் ஊடாக அரசின் உரிய தரப்புகள் உட்பட தன்னார்வ அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணி முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட நிவாரண சுற்றறிக்கைகள் காணப்படுவதனால், அந்த சுற்றறிக்கைகளின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமற்ற முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது இதன் ஊடாக மேற்பார்வை செய்யப்படும். பயனாளிகளையும் நிவாரண நிறுவன வலையமைப்புகளையும் ஒன்றோடொன்று தொடர்பு பட வைத்து, நிவாரண நடவடிக்கைகளை ஒழுங்கு முறையில் பெற்றுக் கொடுப்பதற்கான தலையீடுகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.

கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோரின் பரிந்துரைகளின் பேரில் மட்டுமே உரிய நன்மைகள் உரிய தரப்பினருக்கு போய்ச் சேர வேண்டும். நிவாரணம் பெற அரசியல்மயமாக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளும் அவசியம் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆகவே இவ்விடயம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய தேவை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சமூக சேவைகள் அமைச்சின் கீழ் நலன்புரி நன்மைகள் சட்டம் காணப்படுகின்றன. யாரையும் வித்தியாசமாக நடத்துவது அடிப்படை உரிமைகளைக் கூட மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றன. நிவாரண நடவடிக்கைகளில் பாராபட்சம் காட்டக் கூடாது. பாதிக்கப்பட்ட சகலரையும் சென்றடைய வேண்டும் வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By C.G.Prashanthan

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்