சூர்யாவின் கருப்பு மற்றும் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர். இதனிடையில் அவருடைய அடுத்த படத்துக்கான பணிகள் துவங்கியுள்ளது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ படம் உருவாகவுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகியுள்ளது. இதில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கருப்பு’ முதலில் ரிலீசாக இருக்கிறது. இதனையடுத்து வெங்கி அட்லுரியின் படம் வெளியாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகவுள்ள ‘சூர்யா 47’ படத்துக்கான பூஜை நடந்து முடிந்துள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் டைரக்ஷனில் சூர்யா படமொன்றில் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. தற்போது இந்த காம்போ இணைவது உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் சென்னையில் இப்படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது. சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஜீத்து மாதவன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.